சிவகங்கை,ஜன.29- சிவகங்கை மாவட்டம் சிறுகுடி ஊராட்சியில் குடி யரசு தின கிராமசபைக்கூட்டம் ஊராட்சி தலைவி பஞ்ச வர்ணம் முன்னிலையில் நடைபெற்றது .கூட்டத்திற்கு தலைமை வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூ தன்ரெட்டி ஊராட்சி தலைவி பஞ்சவர்ணம் செயல்பாட் டினை பாராட்டி வாழ்த்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, துணைத் தலைவர் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் சிறுகுடி ஊராட்சி தலைவி பஞ்சவர்ணம் சார்பாக ஊராட்சி செயலர் முனீஸ்வரன் கடந்த கால வேலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். அப்போது புதுமைப் பெண் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெற்று வரு கிற மாணவிகள் விவரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலை வர் மதுசூதன் ரெட்டி கேட்டார். இரண்டு மாணவிகள் கையை உயர்த்தி எழுந்து நின்று பேசினர். அப்போது அவர்களிடம் இந்த கல்வி உதவித்தொகை எதற்கு பயன்படுகிறது என்று ஆட்சியர் கேட்டார். அப்போது ஒரு மாணவி, தட்டச்சு பழகுவதற்கு பயன்படுத்தி வருகிறேன் என்றும் மற்றொரு மாணவி, புத்தகங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தி வருகிறேன் என்றும் கூறினர். ஊராட்சி உதவி இயக்குநர் குமார் நன்றி கூறினார்.