திருவில்லிபுத்தூர், மே 24- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதி களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணி கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனை வர் வீ.ப.ஜெயசீலன் புதனன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவில்லிபுத்தூர ஊராட்சி ஒன்றியம் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி யில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 இலட்சம் மதிப்பில் சமையலயறை கூடம் கட்டப்பட்டு வரும் பணி களையும், திருவண்ணாமலை ஊராட்சியில் என்.சண்முகசுந்தராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், குழந்தைகள் நேய பள்ளி கட்டிடம் கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ.31.30 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டுப்பட்டு வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலை வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) மரு.தண்டபாணி, உதவி பொறி யாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகமார் மீனாட்சி பூவானி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி துரைப்பாண்டியன் திருவண்ணாமலை ஊராட்சி மன்ற தலைவர் மீனா பாட்டக்குளம் சல்லிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் முனி யாண்டி அரசு அலுவலர்கள் உட்பட பலர் உட னிருந்தனர்.