districts

img

வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

வெம்பக்கோட்டை, ஜூலை 7- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்  திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி நேரில் ஆய்வு செய்தார். கணஞ்சாம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்  தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பில்  அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டை யையும், வெம்பக்கோட்டையில் ரூ.3.61  லட்சம் மதிப்பில் பெருமளவு மரக்கன்று கள் நடும் பணி மற்றும் மியாவாக்கி திட்டத்தின் கீழ் ரூ.6.50 இலட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.  பின்பு, துலுக்கன்குறிச்சியில் ஆவாஷ் பிளஸ் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2 வீடுகள்,  ரூ.19.72 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கீழான்மறைநாடு ஊராட்சி மன்ற அலுவல கம் கட்டிடம், ரூ.1.18 இலட்சம் மதிப்பில் புன ரமைக்கப்பட்ட நூலக கட்டிடம் ஆகிய வற்றை பார்வையிட்டார். மேலும், அங்குள்ள அங்கன்வாடி மையம் மற்றும் நியாயவிலைக்கடை ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு)திலகவதி, செயற்பொறியா ளர் சக்தி முருகன், வட்டாட்சியர் ரெங்க நாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்திய மூர்த்தி உட்பட பலர் இருந்தனர்.