காரியாபட்டி, மார்ச் 8- காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாற்றுத் திறனாளி நலத்துறை செயலர் ஆனந்த்குமார், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள பி. புதுப்பட்டியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் பற்றி அறிய மாணவர் களுடன் அமர்ந்து உணவருந்தினர். பின்பு, தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ், ரூ.22.65 இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.1.96 இலட்சத்தில் கட்டப்பட்ட நூல கத்தையும் ஆய்வு செய்தனர். மேலும், அங்குள்ள துணை சுகாதார நிலையத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் உள்ள பயனா ளிகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள், மருத்துவர்களின் வருகை குறித்தும் கேட்டறிந்தனர். பின்பு, மந்திரிஓடை கிராமத்தில், நரிக்குறவர் காலனி யில் 54 குடும்பத்தினர்களுக்கு ரூ.3.19 கோடியில், வீடுகள் கட்டுவதை ஆய்வு செய்தனர்,