districts

img

உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் வேளாண் இயந்திரங்களை ஆட்சியர் ஆய்வு

தேனி, ஜன.22- வேளாண்மை விற்பனை மற்றும் வணிக வளாகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கான வேளாண் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம்  தெரிவிக்கையில், வேளாண்மை மற்றும் உழவர் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில், சிறு, குறு விவசாயி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வகை யில், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப் பட்டு, சாகுபடி செய்வதற்கு தேவையான இயந்தி ரங்கள் மற்றும் வேளாண் கருவிகள் வாங்குவதற்கு தொகுப்பு நிதி வழங்கிடும் பொருட்டு கூட்டுப் பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் ஒரே கிராமத்தில் தொகுப்பாக நிலமுள்ள 20 சிறு, குறு விவசாயிகளை உறுப்பி னர்களாக கொண்டு, விவசாய ஆர்வலர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இதை போன்று அருகில் உள்ள 5 விவசாய ஆர்வ லர் குழுக்களை இணைத்து, (குறைந்தபட்சம் 100 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டு) ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் வேளாண்மை தொடர்பான பொது தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ.5 லட்சம் மூலதன நிதியின் மூலம்  இக்குழுவில் உள்ள சிறு, குறு விவசாய உறுப்பி னர்கள் தங்கள் தேவைக்கேற்றவாறு, நுண்ணீர் பாசன அமைப்பு, நீர் எடுத்து செல்லும் குழாய்கள், பொது பயன்பாட்டிற்கான டிராக்டர், பவர் டில்லர் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்காக பல்வேறு வேளாண் இடு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குநர்  தி.அழகுநாகேந்திரன், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (விவ) விஷ்ணுராம் மேத்தி, வேளாண்மை துணை இயக்குநர், கா.முத்து லட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குநர் எம்.பாண்டி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறி யியல் துறை) எம்.முரேஷ்குமார், வேளாண்மை விற்ப னைக்குழு செயலாளர் ஆறுமுகராஜன் உட்பட சம் பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.