சிவகங்கை, பிப்.5- சிவகங்கை மாவட்ட 2- வது புத்தக திருவிழாவில், தேவ கோட்டை செந்தில் மருத்துவமனை நிறுவனர் சார்பில் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 20 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மது சூதன் ரெட்டி நன்கொடையாக வழங்கினர். புத்தகத்திருவிழாவில் பெருந்திரள் வாசிப்பு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களி டையே பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், திறமை மிக்க பேச்சாளர்களைக் கொண்ட கருத்துரை நிகழ்ச்சிகள், மாயா ஜாலக் காட்சிகள் ஆகியவைகள் நடைபெற்றது. இது தவிர, உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த பிரதிநிதி கள் தாமாகவே முன்வந்து தங்க ளது பங்களிப்பாக அளித்திடும் பொருட்டு, இப்புத்தக திருவிழா வின் மூலம் பல்வேறு நூல்களை நூலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் வழங்கி சிறப்பு சேர்த்து வருகின்ற னர். இப்புத்தக திருவிழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்திட உறு துணையாக இருந்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ப. மதுசூதன் ரெட்டி கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.