மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மதுரை, ஜூலை 27- மதுரை மாநகராட்சிக் கூட்டம் ஜூலை 27 புதனன்று மேயர் இந்தி ராணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், துணை மேயர் நாகராஜன் மற்றும் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சி நிர்வாகத் தின் கீழ் இயங்கி வரும் 96 பள்ளி களில் 120 தூய்மை பணியாளர்கள் முற்றிலும் தற்காலிகமாக கல்வி குழு ஒப்புதலுடன் பள்ளி தலைமை ஆசிரியர்களே பணியாளர்களை நியமித்துக் கொள்ளவும் செல வின தொகையினை கல்வி நிதியிலி ருந்து வழங்குவதற்கான தீர்மான மும் நிறைவேற்றப்பட்டது. இந்த பணியாளர்களின் பணிக்காலம் 89 நாட்கள் என்றும் மேலும் இவர்கள் தற்காலிக பணியாளர்கள். மீண் டும் இவர்கள் பணி தொடர்வதற் கான வாய்ப்புகள் இல்லை என்றும் அதேபோல் எந்தவித முன் அறி விப்பும் இன்றி இவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாமன்ற குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் என். விஜயா பேசுகையில், மக்கள் பிரச்ச னைகளை பேசுவதற்கு அனைத் துக் கட்சிகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். தொடர்ந்து மாமன்ற கூட்டங்களில் மாமன்ற உறுப்பி னர்கள் தங்களுடைய பகுதி பிரச்ச னைகளை கூறுவதற்கு அனுமதி அளிப்பதும் இல்லை. அதேபோல் மாமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தில் விவாதிப்பதற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. இது ஏற்புடையதாக இல்லை. எனவே தொடர்ந்து மாமன்ற உறுப் பினர்களை பேசுவதற்கும் விவா திப்பதற்கும் மேயர் அனுமதிக்க வேண்டும். கட்சிகளுக்கு உறுப்பி னர்களுக்கு தகுந்தாற் போல் இருக்கை என்பது ஒதுக்க வேண் டும். இதுதான் கடந்த கால நடை முறை அந்த அடிப்படையில் ஒவ் வொரு கட்சிக்கும் இருக்கை என் பதை தனியாக மேயர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட திமுக மாமன்ற உறுப்பினர் எம். ஜெய ராமன், கடந்த கூட்டத்திற்கு கம்யூ னிஸ்ட் கட்சியினர் வரவில்லை. அவர்கள் மாநாட்டிற்கு சென்று விட்டார்கள் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் , மாமன்ற கூட்டம் துவங்கப்பட்ட நாட்களில் இருந்து தற்போது உள்ள நாட்கள் வரை உள்ள வீடியோ ஆதாரத்தை பார்க்க வேண்டும். யார் கூட்டத்துக்கு வர வில்லை என்று தெரியும். அந்த நேரத்தில் நீங்கள் ஏதும் கூட்டத் திற்கு வரவில்லை போல் தோன்று கிறது என்று பதிலடியாக கூறினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொறடா டி. குமரவேல் பேசுகை யில், மாமன்ற உறுப்பினர்கள் பேசு வதற்கு முன் கட்சியின் மாமன்ற குழு தலைவர்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். எதிர்க் கட்சிகளுக்கு உரிய இடம் .அதே போல் ஒவ்வொரு கட்சிக்கும் மாமன் றத்தில் அலுவலகம் உள்ளிட்டவை கொடுக்க வேண்டும். மாமன்றத் தில் நிறைவேற்றப்பட்ட தற்காலிக ஆசிரியர் 89 நாள் பணிக்காலம் தற் காலிக பணி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 96 மாநகராட்சி பள்ளிகளுக்கு 120 பேர் தூய்மைப் பணிக்கு தற்காலிக நியமனம் என் பதை ரத்து செய்திட வேண்டும். ஏற்கனவே மாநகராட்சியில் 306 தினக்கூலித்தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. அவர்களி லிருந்து இந்த பணிக்கு பணியா ளர்களை நியமித்திட வேண்டும். வீட்டு வரி உயர்வு அதிகரித்துள்ளது என்னுடைய 23 ஆவது வார்டில் உள்ள சிறு பாத்திர வியாபாரி களுக்கு ரூ.90 ஆயிரம் வீட்டு வரி கட்ட வேண்டும் என்ற ரசீது வந்துள் ளது. சிறு வியாபாரியிடம் ரூ. 90 ஆயி ரம் கேட்கும் மாநகராட்சி நிர்வா கம் பெரும் நிறுவனங்கள் பெரு வாரியான வரிபாக்கினை வைத் துள்ளது. எனவே அந்த வரிகளை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண் டும். பாதாள சாக்கடை கழிவுநீர் தற்போது தெருக்களில் பெருக்கெ டுத்து ஓடுகின்றது .மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வருகிறார் கள். எனவே பாதாள சாக்கடை அடைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். செல்லூரில் இருந்து குலமங்குளம் மெயின் ரோடு வழி யாக முல்லைப் பெரியாறிலிருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற் கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் செல்லூரிலிருந்து மீனாட்சிபுரம் பகுதி வரை பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது சாலைகள் முழுவதும் சேரும் சகதியுமாக உள் ளது. தொடர்ந்து மழை பெய்து வரு வதால் பொதுமக்கள் வாகனங்க ளில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று கூறினார்.
சாக்கடை அடைப்பை சுத்தம் செய்யும் இயந்திரம் எங்கே?
அதிமுக மாமன்ற குழுத் தலை வர் சோலைராஜா பேசுகையில் மண்டலங்களில் நிறைவேற்றப் படும் திட்டங்களுக்கான தீர்மா னங்கள் வார்டுகளில் நிறைவேற் றப்படுவதில்லை அமைச்சர் செல் லூர் ராஜு தொகுதி மேம்பாட்டு நிதி யிலிருந்து சூப்பர் சர்க்யூட் என்ற எந்திரம் பாதாள சாக்கடை அடைப்பு களை சுத்தம் செய்வதற்காக வாங் கப்பட்டது. அது தற்போது எந்த நிலையில் உள்ளது. எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. தொடர்ந்து தெருக்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் அதிக அளவில் வெளி யேறுகிறது. இது போன்ற நவீன இயந்திரங்கள் மூலம் அவற்றை சுத்தம் செய்தால் ஆறு மாதத்திற்கு பாதாள சாக்கடை சுத்தம் செய் யக்கூடிய சூழ்நிலை என்பது ஏற் படாது. வீட்டு வரி என்பது அதிகமாக உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து வீடுகளின் அளவை கணக் கிட்டு தான் வீட்டு வரி கட்ட வேண் டிய ரசீதை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில். அதை எந்த அதிகாரி களும் பின்பற்றுவதில்லை. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் கூறியது போல மாநக ராட்சி அதிகாரிகளாக கணக்கிட்டு ஒரு தொகையை கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இது பொது மக்க ளுக்கு பெரும் சுமையாக உள்ளது. எனவே அதை வரைமுறைப்படுத்தி கணக்கிட்டு கொடுக்க வேண்டும். என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பி னர்கள் பேசுகையில், மழைக்கால மாக இருப்பதால் பாதாள சாக்கடை யை சீரமைக்க வேண்டும், மழை நீர் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும், குடிநீரில் கழிவு நீர் கலப் பதை தடுக்க வேண்டும், தெரு விளக்குகளை உடனடியாக சீர மைக்க வேண்டும், சிதலமடைந் துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சட்டமன்ற உறுப்பினர் மு. பூமி நாதன் பேசுகையில் தெற்கு தொகுதி முழுவதும் பாதாள சாக்கடை கள் சரியாக சீரமைக்கப்படாமல் உள்ளது அதேபோல் தெருவிளக்கு கள் பராமரிப்பு குறைவாக உள்ளது. எனவே அவற்றை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் என்றார். மேயர் இந்திராணி பதிலளித்து பேசுகையில், அதி முக மாமன்ற குழு தலைவர் பேசிய தற்கு தங்களுடைய விவாதத்திற் கான அறிக்கையினை எழுத்து மூல மாக தங்களுக்கு வழங்கப்படும். வரும் காலங்களில் மாமன்ற கூட் டத்தில் மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு உரிய நேரம் வழங் கப்படும். தொடர்ந்து மாமன்ற உறுப் பினர்கள் கூறிய பிரச்சனைகளை சரி செய்வதற்கு அதிகாரிகள் மூல மாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
சாலை பணிகளுக்கான தீர்மானங்கள் நிறுத்திவைப்பு
73 ஆவது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் போஸ் பேசுகையில், சாலை பணிகள் தொடர்பான தீர்மா னம் ஒன்றில் தனது சொந்த நிலம் குறித்த சர்வே எண் இடம்பெற்றுள் ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், இதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனவே தீர்மானங்கள் அனைத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனால், சாலை பணிகள் தொடர்பான 12 தீர்மானங்களும் ஒத்தி வைக்கப்பட்டு, தூய்மை பணி களுக்கான ஒப்பந்த தீர்மானம் மட் டும் விவாதம் இன்றி ஏற்கப்பட்டது. மதுரை மாநகராட்சி மேயர் பொறுப் பேற்றது முதல் இதுவரை 9 மாமன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ள நிலை யில், ஒவ்வொரு கூட்டத்திலும் புதிய புதிய சர்ச்சைகள் எழுவதும், அறிவிப்புகளில் குளறுபடிகள் நிகழ்வதும் தொடர்கதையாக இருப்பது மக்களிடையே பெரும் வருத்தத்தை அளிப்பதாக கூறும் மாமன்ற உறுப்பினர்கள், இனி வரும் காலங்களிலாவது மாமன்ற கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் எனவும், நிர்வாக நடை முறைகள் சீராக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.