districts

img

மயிலாடும்பாறை அருகே கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்த்தேக்க வழி செய்திடுக!

கடமலைக்குண்டு, ஜூன்.16- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே 56 ஏக்கர் பரப்பளவில் சிறுகுளம் மற்றும் 64 ஏக்கர்  பரப்பளவில் பெரியகுளம் ஆகிய 2 கண்மாய்கள் அமைந்துள்ளன. 2 கண்மாய்களுக்கும் தங்கம்மாள்புரம் அருகே மூலவைகை ஆற்றில் இருந்து வரத்து வாய்க்கால் அமைக்கப் பட்டுள்ளது.  இந்த கண்மாய்களில் மரம், செடிகள் ஆக்கிர மித்து காணப்பட்டது. எனவே கண்மாய்களில் நீரை தேக்கி வைத்து பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. விவசாயிகளின் தொடர் கோ ரிக்கையை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2 கண்மாய்க ளையும் தூர்வாரி சீரமைக்க அரசு 1 கோடி  ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து கண்மாய் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. ஆனால் இந்த பணிகள் முறையாக நடைபெற்று முடியவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கண்மாய்க்கு அமைந்துள்ள வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படவில்லை. வரத்து வாய்க்காலில் செடிகள் அதிகளவு ஆக்கிரமித்து காணப்படுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் மட்டுமே கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருந்தாலும் வரத்து வாய்க்கால் வழியாக கண்மாய்களுக்கு நீர் சென்றடைவதில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே கண்மாய்களில் நீர் முழு கொள்ளளவை எட்டவில்லை.  மழைக்காலங்களில் கண்மாயின் குறிப்பிட்ட பரப்பளவில் மட்டும் நீர் தேங்கி காணப்படும். 1 கோடி ரூபாய் செலவில் கண்மாய்கள் சீரமைக் கப்பட்டும் விவசாயிகளுக்கு எந்தவித பயன்பாடும் இல்லாமல் காணப்படுகிறது. மேலும் கன்மாயில் மீண்டும் மரம், செடிகள் ஆக்கிரமிக்க தொடங்கி யுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நட வடிக்கை எடுத்து வரத்து வாய்க்கால்களை சீரமைப்பதுடன் கன்மாயில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்த்தேக்கி வைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.