தேனி, மே 27- தொழிலாளர் நலக் கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு சார்பில் 8 ஆவது நாளாக நடைபயணப் பிரச்சாரம் தேனி மாவட்டம் போடியில் துவங்கியது. வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப் பட்டது. வெள்ளியன்று இரவு போடியில் நடை பெற்ற பொதுக் கூட்டத்திற்கு பின் சனிக் கிழமை காலையில் கட்டபொம்மன் சிலை யிலிருந்து 8 ஆவது நாள் பிரச்சாரம் துவங்கி யது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் எஸ்.கே.பாண்டி யன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பழனிசெட்டிபட்டியில் விவ சாயிகள் சங்க தேனி தாலுகா செயலாளர் வி. ராஜேந்திரன் தலைமையில் நடைபய ணக்குழுவிற்கு வரவேற்பு அளிக்கப் பட்டது.தேனி பழைய பேருந்து நிலையம் அருகே கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் பி.பிச்சைமணி தலை மையில் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள்,ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்,மின் ஊழியர்கள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பா.ராமமூர்த்தி வாழ்த்தி பேசினார். ஆண்டிபட்டி முருகன் தியேட்டர், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ராமர் தலைமை வகித்தார்.மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன் வாழ்த்திப் பேசினார்.
பெரியகுளத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.பழைய பேருந்து நிலையத்தில் சிஐடியு மூத்த தலைவர் எஸ்.ஏ.ரஜாக் நினைவு கொடிக்கம்பத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் சிஐடியு கொடியை ஏற்றி வைத்தார்.வடுக பட்டியில் தாலுகா செயலாளர் எஸ்.கணே சன் தலைமையிலும்,ஜெயமங்கலத்தில் தாலுகா பொருளாளர் ஆர்.கே.ராமர் தலை மையிலும் தேவதானப்பட்டியில் மன்னர் மன்னன் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் சிஐடியு தேனி மாவட்ட தலைவர் டி.ஜெயபாண்டி,மாவட்ட பொரு ளாளர் ஜி.சண்முகம்,மாவட்ட துணைத் தலைவர் சி.முருகன்,மா.கணேசன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் ஏ.முருகவேல்,அரசு போக்கு வரத்து கழக தொழிலாளர் சங்க நிர்வாகி சதீஸ்குமார்,மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் தேவ ராஜன்,வளர்மதி,கூட்டுறவு ஊழியர் சங்க தலைவர் டி.பிச்சைமணி,டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர்கள் பாலராஜா, ராமு,தையல் தொழிலாளர் சங்கத் தலைவர் ஏ.சி.காமுத்துரை,அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவர்கள் ஓ.சாந்தியம்மாள், நாக லட்சுமி,வனிதா,வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி.முனீஸ்வரன் மற்றும் சிபிஎம் இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.