districts

img

மானாமதுரை,இராமநாதபுரத்தில் சிஐடியு நடைபயண பிரச்சாரம்

சிவகங்கை மே 26- மானாமதுரை,இராமநாதபுரத்தில்  சிஐடியு நடைபயண பிரச்சாரம் மே 26 அன்று நடைபெற்றது. பல்வேறு சங்கங்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்கிட சட்டம் இயற்ற வேண்டும்.  பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதி ஆணையம் ஏற்படுத்தி  நல வாரிய குறைபாடுகளை களைந்திட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தின் 7 முனைகளிலிருந்து  இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் நடைபயண பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார், மாநிலச் செயலாளர்கள் தங்கோ கன், எம்.சிவாஜி, மாநிலக்குழு உறுப்பினர் சிங்காரம் ஆகியோர் தலைமையில் வந்த நடைபயணக்குழுவிற்கு மானாமதுரை பழைய பேருந்து நிலையத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் வீரையா தலைமை யில் வரவேற்பு அளித்தனர். மாவட்ட செய லாளர் சேதுராமன்,மாவட்ட பொருளாளர் தெட்சிணாமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்ற னர். மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார் பேசினார்.  

இராமநாதபுரம்

இராமநாதபுரம் எல்ஐசி கிளை சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது கிளைச் செய லாளர் முத்துப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  சத்திரக்குடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப் பட்டது பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகே சிஐடியு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.  பரமக்குடி பேருந்து நிலையத்தில் மாவட்ட துணைச்செயலாளர் டி.ராஜா தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மாநில உதவி பொதுச் செயலா ளர் வி.குமார் உரையாற்றினார். ஏஐடியுசி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது மாவட்ட நிர்வாகி எஸ்.பி.ராதா வாழ்த்தி பேசினார் பரமக்குடி எல்ஐசி மற்றும்  அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக எல்ஐசி அலுவலகம் மற்றும் ஓட்ட பாலம் அருகில் வரவேற்பு  அளிக்கப்பட்டது.  பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்குள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஆட்டோ, சுமைப்பணி தொழிலாளர்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  வெள்ளிக்கிழமையன்று நடைபெற பிரச்சா ரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சந்தானம், மாவட்ட துணைத் தலைவர் வி.பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர் .இரண்டு நாள் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் கலைச் சுடர் மணி, மதுரை ராமர் பாடல்கள் இடம் பெற்றன.