மதுரை, மே 20- விலைவாசி உயர்வு, வேலை யின்மை, கல்வி, சுகாதாரம், விவசா யம் ஆகியவற்றில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வலியுறுத்தி சிஐ டியு தமிழ்நாட்டில் எட்டு முனைகளி லிருந்து மே 20 முதல் 30 ஆம் தேதி வரை நடைபயணம் மேற்கொண் டுள்ளது. தென்காசி மாவட்டம் செங் கோட்டையில் தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்தி ரன், மாநிலச் செயலாளர் பி.என் தேவா ஆகியோர் தலைமையி லான நடைபயணத்தை மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு துவக்கி வைத்தார். பயணக்குழு வில் சிஐடியு மாநிலத் துணைச் செய லாளர் எம் மகாலட்சுமி, மாநிலக் குழு உறுப்பினர் ஜி.கௌரி (மதுரை புறநகர்). லூர்துரூபி (மதுரை மாந கர்), ராமச்சந்திரன் (தேனி), பால சுப்பிரமணியன் (திண்டுக்கல்) உட்பட ஏராளமானோர் பங்கேற் றுள்ளனர். நடை பயணக்குழு தென்காசி மாவட்டத்தைக் கடந்து விருதுநகர் மாவட்டத்தை வந்தடைந்தது. பய ணக்குழுவிற்கு இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசியில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட் டது. சிவகாசி அருகே சாட்சியாபுரம் பகுதியில் பயணக்குழுவை ஷெரீப், ஜேசிடியு செயலாளர் முத்துராஜ், பேராசிரியர் சுரேஷ், விருதுநகர் மாவட்டப் பொருளாளர் வி.ஆர்.செல்லச்சாமி, கே.முரு கன், ஆர்.சுரேஷ்குமார், இ.பழனி, ஜெபஜோதி உட்பட ஏராளமா னோர் வரவேற்றனர்.
ஹவுசிங்போர்டில் ஒன்றியக் கன்வீனர் சி.மோகன்ராஜ் தலை மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி. பாலசுப்பிரமணியன், முத்துச்சாமி, சங்கரய்யா, பாண்டீஸ்வரன் ஆகி யோர் வரவேற்பளித்தனர். முன்னதாக இராஜபாளை யம் சொக்கர் கோவில், திருவில்லி புத்தூர் காமராஜர் சிலை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடைபயணக் குழுவினருக்கு அனைத்து சங்கங்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. சொக்கர் கோவிலில் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கணே சன், ஜவஹர் மைதானத்தில் மாநி லக்குழு உறுப்பினர் கண்ணன், நான்கு முக்கு ரோட்டில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர்கள் சங்க நிர்வாகி முத்தையா தலைமையில் வரவேற்பளிக்கப் பட்டது, நிகழ்வில் சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் சாராள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி, இராஜபாளையம் நகர் செயலாளர் மாரியப்பன் உட்பட ஏராளமானோர் வரவேற்றனர்
சங்கரபாண்டியபுரத்தில் தமிழ்நாடு விசைத்தறி தொழிலா ளர் சங்க வட்டார செயலாளர் சக்தி வேல், மாவட்டப் பொதுச் செயலா ளர் சோமசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் முனியாண்டி உள்ளிட்ட பலர் வரவேற்றனர். திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே மாதர் சங்க மாவட்ட நிர்வாகி ரேணுகாதேவி தலைமையில் வரவேற்பளிக்கப் பட்டது. மல்லியில் சிஐடியு மாவட்ட நிர்வாகி சந்தனம், மாநிலக்குழு உறுப்பினர் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் வரவேற்றனர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்க சிவகாசி கிளை நிர்வாகி பாலாஜி, அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்கத்தினரும் பய ணக்குழுவை வரவேற்று சிறப்பித்த னர். வரவேற்பு நிகழ்வுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே அர்ஜூனன் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பிச்சைக்கனி, வீர சதா னந்தம் சாலை போக்குவரத்து சங்க மாவட்டப் பொதுச் செயலா ளர் திருமலை, தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் உயிர்காத்தான ஆகியோர் பங் கேற்றனர்.