சிவகங்கை, நவ.2- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா தாயமங்கலம் முத்துமாரி யம்மன் கோவிலில் முடி திருத்தும் தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பாக கோவில் முன்பு சிஐடியு சார் பில் காத்திருக்கும் போராட் டம் நடைபெற்றது. பின்னர் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், சிஐடியு மாவட்டத் தலை வர் வீரையா, மாவட்டச் செய லாளர் சேதுராமன், பொதுச் செயலாளர் வேங்கையா, மாவட்ட துணைத் தலைவர் அழகர்சாமி, சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் ராஜீ, பொதுச் செயலாளர் முருகானந்தம், முத்துக்குமார், மாரியப்பன், சோணைமுத்து, முரளிக் கண்ணன், முத்துராமு, சோணைமுத்து, மாரிதாஸ், ராமகிருஷ்ணன், விஜய ராமன் ஆகியோர் தொழிலா ளர்கள் தரப்பிலும், கோயில் அறங்காவலர் வெங்கடே சன் செட்டியார், இளையான் குடி துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தாயமங்கலம் கோவிலில் முடிதிருத்தும் தொழிலா ளர்களின் பிரச்சனையை அறநிலையத் துறை இணை ஆணையர் விசாரித்து தீர்வு காணும்வரை பழைய நிலை தொடர வேண்டும் என உடன் பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.