districts

img

காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு கோரி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன். 20-  டாஸ்மாக் ஊழியர களுக்கு பணிவரன்முறை, காலமுறை ஊதியம், பணிப்  பாதுகாப்பு வழங்க வேண்  டும் என்று வலியுறுத்தி சிஐ டியு டாஸ்மாக் ஊழியர் சங் கம் சார்பில் செவ்வாயன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைப் பொதுச்செயலா ளர் பி. முருகன் தலைமை வகித்தார். மாநில துணைத்  தலைவர்கள் சி. வேல்முரு கன், எல்.சரவணப்பெருமாள்,  சிஐடியு மாநில துணைத் தலைவர் இரா.தெய்வராஜ்,  மாவட்டச் செயலாளர் இரா. லெனின் ஆகியோர் பேசி னர். மாநில சம்மேளனத் தலைவர் இ. பொன்முடி நிறைவுரையாற்றினார், மாவட்டச் செயலாளர் டி. சிவக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.  இஎஸ்.ஐ. மருத்துவ  திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடை களை கேரளாவைப் போன்று  கணினி மயப்படுத்தி வாடிக்  கையாளர்களுக்கு ரசீது வழங்க வேண்டும். டாஸ் மாக் கடை அருகே மன மகிழ் மன்றத்திற்கு அனுமதி  வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று ஆர்ப்  பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.