சிவகங்கை, டிச.17- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இயங்கி வருகிற வட்டார போக்குவரத்து ஆய்வா ளர் அலுவலகத்தை சட்டமன்றத்தில் அறிவித்த படி ஆர்டிஓ அலுவலகமாக தரம் உயர்த்தக் கோரி சிஐடியு காரைக்குடி ஒருங்கிணைப்புக்குழு சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் காரைக்குடி மண்டல பொதுச்செயலாளர் தெய்வீர பாண்டி யன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சேதுராமன், ஆட்டோ தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் சிவக்குமார், சிஐடியு மாவட்ட துணை செய லாளர் கே .ஆர். அழகர்சாமி, தனியார் மோட்டார் வாகன சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்தி ரன், சாலை போக்குவரத்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பேசி னர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செய லாளர் தெட்சிணாமூர்த்தி பேசுகையில், காரைக்குடி நகரத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. ஆட்டோ மட்டும் 1500 உள்ளது. கார், மேக்சி கேப் ,லாரி ,தனியார் பேருந்துகள் என பத்தாயிரம் உள்ளது .இந்த பத்தாயிரம் வாகனங்களுக்கு அலுவலக வேலை சம்பந்தமாக காரைக்குடியில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிவகங்கை செல்ல வேண்டி உள்ளது.சுற்றுலா செல்ல பெர்மிட் பெற சிவகங்கை ஆர்டிஒ அலுவல கத்திற்கு சென்று வருகிறோம்.ஒரே நாளில் பணி முடிவடைவது கிடையாது. இந்த சிரமங்களை குறைப்பதற்காகத்தான் காரைக்குடியில் ஆர்டிஓ அலுவலகம் துவங்க வேண்டும் என்று சிஐடியு தொழிற்சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் வந்தது. ஆர்டிஒ அலு வலகம் தொடங்க இதற்கான அலுவலகமும் பைபாஸில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்குடியில் இயங்கி வருகிற வட்டார போக்கு வரத்து ஆய்வாளர் அலுவலகத்தை ஆர்டிஓ அலுவலகமாக தரம் உயர்த்தக் கோரி காரைக் குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி சட்ட மன்றத்தில் வலியுறுத்தினார். இதற்கு ஆர்டிஓ அலுவலகமாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் பதிலளித்து உறுதி கொடுத்தார். ஆனால் அதற்கான முன் முயற்சிகள் நடை பெறவில்லை.
இது தொடர்பாக பலமுறை சிஐ டியு தொழிற்சங்கம் மாவட்ட ஆட்சித் தலை வருக்கும் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளோம். ஆர்டிஓ அலுவலகமாக தரம் உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் சிவக்குமார் பேசுகையில், இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே போக்குவரத்துத்துறையின் ஆணையாளர் ஆள் பற்றாக்குறையால் அந்த பணிகள் நடைபெறவில்லை என்று அறிக்கை வெளியிட்டதாக தெரிய வருகிறது. சட்டமன்றத் தில் அளித்த உறுதியை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில்அனைத்து தொழிலாளர் களையும் ஒன்றுதிரட்டி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று பேசினார். ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார் பேசுகை யில், சிவகங்கை அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு பேசும்போது தற்போது தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது அந்த நிறுத்தி வைக்கப்பட்ட தகவல் காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினருக்கும் தெரியப்படுத்தி இருக்கி றோம். விரைவில் நிச்சயமாக தொடங்கும் என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.