districts

img

அரசு வேலையை பறிக்கும் அரசாணையை ரத்து செய்க! சின்னமனூர், பழனியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன.10- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அரசு வேலையை பறிக்கும் அர சாணை எண் 152,139 ஐ ரத்து செய்யக் கோரி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழி யர் சங்கத்தின் சார்பில் சின்ன மனூர் நகராட்சி அலுவலகம்  முன்பு  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒப்பந்த  துப்புரவு பணி யாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு தேனி  மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்  படி சம்பள உயர்வு வழங்க வேண்டும். சின்னமனூர் நகராட்சி நிரந்தர துப்புரவுப் பணியாளர்களுக்கு சரண்டர் தொகை, மழை கோட், பாதுகாப்பு உபகரணங்கள்  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . சின்னமனூர் நகராட்சி அலுவலகம் முன்பு அதி காலை  காலை 5.55 மணிக்கு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு  செயலாளர் எஸ்.பொம்மையன் தலைமை வகித்தார் . கிளை நிர்வாகிகள்  தனசேகரன், பாண்டியம்மாள், செல்ல தாய், மகாலிங்கம், ராணி, சந்திரன், உள்ளிட்ட தொழி லாளர்கள் கலந்து கொண்ட னர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி. ஜெயபாண்டி கோரிக்கைகளை விளக்கி பேசினார். பழனி பழனி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்திற்கு பழனி நகராட்சி தூய்மை பணியாளர் சங்க செயலாளர் பி மாரியப்பன் தலைமை வகித்தார். சங்க தலைவர் என். நாச்சிமுத்து சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர் சோ. மோகனா, சிஐ டியு கன்வீனர் கே. பிச்சை முத்து ஆகியோர் பேசினர்.