விருதுநகர், ஏப்.27- குடிநீர் விநியோகம் செய் யும் தற்காலிக ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க வாரியம் ஆணை பிறப்பித்ததை ரத்து செய்ய வேண்டும். உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி தொகுப்பூ திய ஊழியர்களுக்கு ஊதிய மறு நிர்ணய நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. விருதுநகர் குடிநீர் வடி கால் வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத் திற்கு மாவட்டத் தலைவர் வி.ஆர்.செல்லச்சாமி தலை மையேற்றார். போராட்டத்தை ஆதரித்து மாவட்டக்குழு உறுப்பினர் பரமசிவம் பேசி னார். கோரிக்கைகளை விளக்கி மாநில துணை பொது செய லாளர் சோனை கருப்பையா பேசினார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.அசோகன், பாலசுப்பிரமணியன், கருப்ப சாமி, பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் வி.அழகுமலை துவக்கி வைத்து பேசினார். மாநில பொதுச் செயலாளர் குடியரசு விளக்கி பேசினார். இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி, மத்திய சங்க முன்னாள் உதவித் செயலாளர் ஆஞ்சி ஆகியோர் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ் நிறைவுரையாற்றினார். சிவகங்கை சிவகங்கையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சேவியர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் சேதுராமன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செய லாளர் உமாநாத், சிஐடியு மாவட்ட தலைவர் வீரய்யா, குடி நீர் வடிகால் வாரிய மாவட்ட துணைத்தலைவர் நாகசந்துரு, விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் காசிராஜன் ஆகியோர் பேசினர்.