districts

img

உலக அமைதியை வலியுறுத்தி சிஐடியு உறுதி மொழியேற்பு

தூத்துக்குடி, செப். 1  உலக தொழிற்சங்க சம்மேளனம்  செப்டம்பர் 1 ஐ உலக அமைதிக்கான நடவடிக்கை தினமாக அறிவித்துள்ளது. ஏகாதிபத்திய போர்க ளுக்கு எதிராகவும்,சர்வதேச உறவுகளின் ராணுவ மய மாக்கலுக்கு எதிராகவும், தடைகள், முற்றுகைகள் மற்றும் பொருளாதாரப் போர்களின் ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு எதிரா கவும், பட்டினி. வறுமை. வேலையின்மை, கல் லாமை, இராணுவ தாக்குதல் ஆகியவற்றை போக்கிடவும்  பொதுமக்கள் பாது காப்பு மற்றும் உலக அமைதி யை வலியுறுத்தியும், சிஐ டியு தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் வியாழனன்று தூத்துக்குடி பூபால்ராய புரம் தோழர் பி.ராமமூர்த்தி படிப்பகம் அருகே உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது.தோழர் ஆட்டோ ஜெயராஜ் அவர்களின் நினைவை போற்றும் வகை யில் படத் திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சங்க ரன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர்  ஆர் ரசல், மாவட்ட தலைவர் ஆர்.பேச்சிமுத்து மாவட்ட நிர்வாகிகள் டி.முனியசாமி, கே.காசி ,சிபிஐ எம் புறநகர் செயலாளர் பா.ராஜா, சிஐடியு மாவட்டக்குழு நம்பி ராஜன், தாமோதரன், கட்டு மான சங்கத்தின் நிர்வாகி பெருமாள் கிருஸ்டோபர் பொன்னு உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்தனர்.