districts

img

சிஐடியு அரசு போக்குவரத்துத்தொழிலாளர் சங்கத்தினர் பிரச்சாரம்

மதுரை, மார்ச் 7-  போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் இடையி லான பற்றாக்குறையை ஈடுகட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய  வேண்டும். 1.4.2003-க்கு பின்  பணியில் சேர்ந்த தொழிலாளர் களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வுவூதியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு , மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமலாக்க வேண்டும். ஒப்பந்தப்படி ஓய்வூதியத்தை முறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற அன்றே பணப்பலன்களை வழங்கிட வேண்டும். தொழிலாளர்  களுக்கு சாதகமான நீதிமன்ற தீர்ப்பு கள் மீது மேல்முறையீடு  செய்யக்  கூடாது என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 7 அன்று சிஐடியு அரசு போக்குவரத்துத்தொழிலாளர்  சங்கத்தினர் வாகனப்பிரச்சாரம் மேற்கொண்டனர். அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலை மையில் வாகன பிரச்சாரம் நடை பெற்றது. சங்கத்தின் தலைவர் பி.  எம்.அழகர்சாமி, பொதுச்செய லாளர் ஏ.கனகசுந்தர், பொருளா ளர் டி.மாரியப்பன், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.செல்வராஜ், சிஐ டியு புறநகர் மாவட்டச் செயலாளர் அரவிந்தன், மாநகர் மாவட்டத் தலைவர் இரா.தெய்வராஜ் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இராமநாதபுரம்

காரைக்குடி மண்டல சிஐடியு  சார்பாக இராமநாதபுரம் மாவட்  டத்தில் இராமேஸ்வரம் இராமநாத புரம் நகர் மற்றும் புறநகர் பரமக்  குடி கமுதி முதுகுளத்தூர் ஆகிய  இடங்களில் இரு சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இராமேஸ்வரத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.  மார்டின் சந்தியாகு  தர்மர் உள்  ளிட்ட கிளை நிர்வாகிகள் பேசினர். இராமநாதபுரம் புறநகர் நகர்  கிளைகளில் பிரச்சாரம் நடைபெற் றது. செந்தில் போஸ் பாஸ்கரன் துரைப்பாண்டி, திலகர், சசிகுமார் உள்ளிட்டு திரளாக பங்கேற்றனர். பரமக்குடியில் லோகநாதன், எஸ்.பி.கேசவன் பேசினர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் டி. ராஜா வாழ்த்தி பேசினார். கமுதி யில் லூர்துசாமி மற்றும் ஜீவா  உள்ளிட்டோரும்  முதுகுளத்தூரில் திருமலை மற்றும் நிர்வாகிகள் பேசினர். போக்குவரத்து தொழி லாளர்கள் மாவட்டம் முழுவதும் ஆறு இடங்களிலும் பிரச்சார பய ணத்தில் பங்கேற்றனர். 

திருவில்லிபுத்தூர் 

திருவில்லிபுத்தூர் கிளை முன்பு நடைபெற்ற பிரச்சார இயக்கத் திற்கு கிளைத் தலைவர் முனீஸ்வ ரன் தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் வெள்ளத்துரை விளக்கி பேசினார். வத்திராயி ருப்பு பணிமனை முன்பு முருகன்  தலைமை தாங்கினார். இராஜ பாளையம் கிளை 1 மற்றும் கிளை  இரண்டில் பிரச்சாரப் பயணம் நடை பெற்றது.