districts

img

ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கிய ஒப்பந்ததாரர்கள்

மதுரை, டிச.16- ஒப்பந்த தூய்மைப்பணி யாளர்களுக்கு அரசு நிர்ண யித்த ஊதியத்தை விட ரூ. 2200 குறைத்து வழங்கிய ஒப்பந்ததாரர்கள்  மீது மதுரை மேயரிடம் சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிஐடியு தொழிற் சங்க நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். மதுரை  மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களாக 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களு க்கு அரசு நிர்ணயித்த ரூ.13 ஆயிரத்து 800 ஊதியமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்ததாரர்கள் நவம்பர் மாத சம்பளம் என்று ரூ. 11 ஆயிரத்து 600 மட்டுமே வழங்கியுள்ளனர்.  இது குறித்து சிஐடியு மதுரை  மாநகராட்சி தொழி லாளர்  சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.மீனாட்சி சுந்த ரம், மாவட்டப் பொருளாளர் கே.கருப்பசாமி மற்றும்  சங்க நிர்வாகிகள் வெள்ளி யன்று  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாமன்ற கொறடா -23 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்  டி.குமர வேல் மற்றும் 56 ஆவது வார்டு  மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்மாள் ஆகியோரை சந்தித்து தெரி வித்தனர். பின்னர் தொழிற்சங்க நிர்வாகிகளையும் தொழிலா ளர்களையும் மாமன்ற  உறுப்பினர்கள் அழைத்துச் சென்று மாநகராட்சி மேயர் வா. இந்திராணியிடம் புகார் மனுவினை அளித்தனர். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததா ரர்களை அழைத்துப் பேசி, உரிய சம்பளம் வழங்குவ தற்கான நடவடிக்கை எடுக் கப்படும் என்று மேயர் கூறினார்.