சிவகாசி, நவ.22- மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூ ராட்சிகளில் உள்ள தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் பணிகளை முற்றிலும் தனியார்மயமாக்குகின்ற நிரந்த ரப் பணிகளை ஒழித்துக் கட்டுகின்ற அர சாணை எண் 152 ஐ ரத்து செய்யக்கோரி சிஐடியு சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. 1996ல் உருவாக்கப்பட்ட பணி விதி களை திருத்தம் செய்யக் கூடாது. ஓய்வு பெற்ற பின்பும், விரிவாக்கத்திற்கு ஏற்பவும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள நிரந்தர பணியிடங்களை பாதுகாப்பதோடு, நிரந் தர பணியிடங்களை உருவாக்கி இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு-ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சி அலுவவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு பி.பால்ராஜா தலைமையேற்றார். கிளைத் தலைவர் சங்கர், கிளை செயலாளர் மூர்த்தி, பொருளாளர் கருப்பசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். போராட்டத்தை துவக்கி வைத்து சிஐ டியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா பேசி னார்.
கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் எம்.திருமலை பேசினார். முடி வில் மாவட்ட செயலாளர் ஆர்.பால சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். மேலும் இதில், மூத்த தலைவர் ஜே.லாசர், சிபிஎம் நகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார், சிஐடியு நிர்வாகிகள் இ.பழனி, அம்பேத்கும ரேசன் உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை சிஐடியு மாநகராட்சி தொழிலாளர் சங்கம், மாநகராட்சி நகராட்சி அலுவலர்கள் சங்கம் மற்றும் பொறியியல் பிரிவு சங்கம் சார்பில் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் கே. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் எம். பால சுப்பிரமணியம், பொறியியல் பிரிவு செய லாளர் கே. கண்ணன், பொருளாளர் கே. டி. துரைக் கண்ணன், மாநகராட்சி நக ராட்சி அலுவலர்கள் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சி. மகுடீஸ்வரன் ,மாநி லத் துணைத் தலைவர் பி. பஞ்சவர்ணம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாமன்ற உறுப்பினர் டி. குமர வேல் ஆதரித்துப் பேசினார். சிஐடியு மாவட்ட பொருளாளர் கருப்பசாமி மற்றும் நிர்வாகிகள் சரவணன், சீதாலட்சுமி, கண்ணன், நாச்சியப்பன், ரவி ரமேஷ், முரு கன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.