districts

ஏப்.20, 25 பாம்பன், திருப்புல்லாணியில் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி முற்றுகை

இராமநாதபுரம், ஏப்.11-  இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் அதிக விபத்திற்கு காரணமாக விளங்கும்  டாஸ்மாக் கடைகளையும், திருப்புல்லாணி யில் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதி அருகே உள்ள டாஸ்மாக் கடையையும் அப்பு றப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு சிஐடியு மாவட்டச்  செயலாளர் எம்.சிவாஜி மனு அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய மனுவில் கூறியிருப்ப தாவது: இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குள் 32 டாஸ்மாக் கடைகள் இயங்குவதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. 32  கடைகளையும் மூடி இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக  மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக இந்த 32 கடைகளில் பாம்  பனில் இயங்குகிற மூன்று டாஸ்மாக் கடை கள் மக்களுக்கு மிகப்பெரிய தொல்லை யாகவும், அதே நேரத்தில் அதிகமான விபத்  துக்களை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் அமைந்திருக்கிறது.  மேலும் திருப்புல்லாணியில் ஆதிதிரா விடர் அரசு மாணவர் விடுதி அருகில் டாஸ்  மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் மாண வர்களுக்கு பல நேரங்களில் தொல்லையும் தொந்தரவும் ஏற்படுகிறது. மேலும் விவ சாய நிலத்தில் அமைந்துள்ளது.

அரசின் விதிப்படி பள்ளிகள், கல்லூரி கள், விடுதிகள்,கோவில்கள் அருகில் டாஸ்  மாக் கடைகள் இயங்க கூடாது என்கிற விதி  இருந்தும் திருப்புல்லாணியில் அப்பட்டமாக அரசு விதி மீறப்பட்டிருக்கிறது. அதேபோல் பாம்பனில் இயங்குகிற மூன்று கடைகளும் போக்குவரத்திற்கு பொது மக்களுக்கு கடுமையான இடையூறாக அமைந்திருக்கிறது.  பெண்கள் அந்தப் பகுதியில் நடமாட முடி யாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்ச னையில் தலையீடு செய்து பாம்பனில் இயங் குகிற மூன்று டாஸ்மாக் கடைகளையும், திருப்புல்லாணி ஆதிதிராவிடர் மாணவர்  விடுதி அருகே இயங்குகிற டாஸ்மாக் கடை யும் முதல் கட்டமாக அப்புறப்படுத்தி பொது மக்களுடைய இயல்பு வாழ்க்கையை பாது காத்திட வேண்டும். மேலே கண்ட கடைகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி 20.4.2023 அன்று திருப்புல்லாணி டாஸ்மாக் கடை முன்பும், 25-4-2023 அன்று பாம்பன் மூன்று கடைகள் முன்பும் சிஐடியு  தொழிற்சங்கத்தின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்  பட்டுள்ளது. தாங்கள் தலையிட்டு டாஸ்மாக் கடைகளை அகற்றி போராட்டத்தை முடி வுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.