districts

img

சிஐடியு 7 ஆவது நாள் நடைபயணம் கம்பத்தில் துவங்கியது

தேனி ,மே.26- தொழிலாளர் நலக் கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு  சார்பில் 7 ஆவது நாளாக  நடைபயணம்  தேனி மாவட்டம் கம்பத்தில் துவங்கியது .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி  மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை துவங்கி வைத்தார். வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.  குறைந்தபட்ச ஊதியம் மாதம்  ரூ.26 ஆயிரம் வழங்க சட்டம்  இயற்ற வேண்டும். பொதுத்துறை  நிறு வனங்களை தனியார் மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதி ஆணையம் ஏற்படுத்தி  நலவாரிய குறைபாடு களை களைந்திட வேண்டும் என்று  வலியுறுத்தி தமிழ்நாட்டின்  7 முனைகளிலிருந்து இந்திய தொழிற் சங்க  மையம் (சிஐடியு) சார்பில் நடைபயண பிரச்சா ரம் நடைபெற்று வருகிறது.  தென்காசி மாவட்டம் ,செங்கோட்டையிலிருந்து சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலான நடை பய ணக்குழு வியாழனன்று இரவு கம்பம் வந்தது .நடை பயணக் குழுவில் மாநிலக்குழு உறுப்பினர்கள் லூர்து ரூபி, கெளரி,தேனி மாவட்டச்  செயலாளர் எம்.ராமச் சந்திரன் ,தென்காசி மாவட்ட செயலாளர் மணிகண் டன்,விருதுநகர் சந்திரன் ,திண்டுக்கல் பாலசுப்பிரமணி, தேனி வெண்மணி ,மதுரை புறநகர் எம்.கண்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் .  வெள்ளிக்கிழ மையன்று காலை 7 ஆவது நாளாக பயணத்தை துவக்கியது.கம்பம் காந்தி சிலையில் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஏரியா செயலாளர் வி. மோகன் தலைமை வகித்தார் .பயணக்குழு தலைவர்  எஸ் .ராஜேந்திரனுக்கு சால்வை அணிவித்து ,மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை கொடியசைத்து துவக்கி வைத்தார் .கட்சியின் ஏரியா செயலாளர் கே.ஆர்.லெனின் வாழ்த்தி பேசினார் .போக்குவரத்து மின்சாரம், கட்டுமானம்,சாலையோர வியாபாரிகள் ,ஆட்டோ தொழிலாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் . பின்னர் க.புதுப்பட்டியில் நடைபயணக்குழுவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சின்னமனூரில் அதிர்வேட்டுகள் முழங்க நடை பயணக்குழுவிற்கு உற்காக வரவேற்பு அளிக்கப் பட்டது. மாவட்ட உதவி தலைவர் எஸ் . பொம்மையன் தலைமையில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.பின்னர் புலிகுத்தி ஊராட்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வேல் பிரகாஷ் தலைமையில் மாண்வர்கள் வரவேற்பு அளித்தனர். பாளையத்தில் சிஐடியு பொறுப்பாளர் டி.கே.சீனி வாசன் தலைமையிலும் ,கோம்பையில் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் சி.மு.இப்ராஹிம் தலைமையிலும் ,கோம்பையில் பண்ணைப்புரம் பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.சுருளிவேல் தலைமையிலும் ,தேவாரத்தில் மாவட்ட நிர்வாகி மணிமாறன் சோலை தலைமையிலும்  வரவேற்பு அளிக்கப்பட்டது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் சித்ரா, தேவாரம் ஏரியா செயலாளர்  ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   போடி தாலுகாக்குழு சார்பில் ராசிங்காபுரத்தில் சிஐடியு நிர்வாகி நாகராஜன் தலைமையிலும் ,போடி நகரில் தாலுகா செயலாளர் பி.சந்திரசேகர் தலை மையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . இந்நிகழ்ச்சிகளில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் , சிஐடியு தேனி மாவட்ட தலைவர் டி.ஜெய பாண்டி ,மாவட்ட பொருளாளர் ஜி.சண்முகம் ,மாவட்ட துணைத் தலைவர் சி.முருகன் ,மாவட்ட நிர்வாகிகள் பி.ஜெயன்,நாகலட்சுமி ,பிச்சைமணி,அரசு போக்கு வரத்து கழக தொழிலாளர் சங்க துணைப் பொ துச்செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .நடைபயணத்தில் சிஐடியு விற்கு ஆதரவாக எல்ஐசி ஊழியர்களும் பங்கேற்று வருகிறார்கள் .