24 ஆண்டுகளாக வழக்கு நடத்தி தீர்ப்பளித்தும் அமலாக்க மறுப்பதா?
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசு போக்குவரத்துக்கழக பஸ்பாடி கிளீனர்களை பணி நிரந்தரப்படுத்துக!
மதுரை, ஏப்.26- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசு போக்குவரத்துக்கழக பஸ் பாடி கிளீனர்களை பணி நிரந்தரப் படுத்தக் கோரி ஏப்ரல் 26 அன்று சிஐடியு மற்றும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கழக மதுரை மண்டலத்தில் 1998 ஆம் ஆண்டில் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணியில் ( Bus Body Cleaner ) இருந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி 2001 ஆம் ஆண்டு சிஐடியு சங்கத்தின் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த மதுரை தொழி லாளர் நீதிமன்றம் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென 2013 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது . நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் விண்ணப்பம் மற்றும் மேல்முறையீடு விண்ணப் பம் 2018 ஆண்டு தள்ளுபடி செய் யப்பட்டது. மேல்முறையீடு விண்ணப் பத்தை, மறுஆய்வு செய்யக் கோரி நிர்வாகம் தாக்கல் செய்த மறு ஆய்வு விண்ணப்பமும் 2021 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக் கல் செய்த சிறப்பு விடுப்ப மனுவை விசாரித்து 08.08.2022 - இல் 81 பஸ்பாடி கிளீனர்களை நிரந்தரப் படுத்த உத்தரவு பிறப்பித்தது. இதையொட்டி 2 முறை பேச்சு வார்த்தை நடத்தியும், தீர்ப்பை அமல்நடத்தாமல் நிர்வாகம் காலம்தாழ்த்தி வருகிறது . மேலும், நிர்வாகத்தின் மீது 2021 ஆம் ஆண்டு போடப்பட்ட அவமதிப்பு வழக்கும் நிலுவையில் உள்ளது. இதில் சம் பந்தப்பட்ட சில தொழிலாளர்கள் 60 வயது முடியும் நிலையில் உள்ளனர். 24 ஆண்டுகளாக வழக்கு நடத்தி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்பும் நிர்வாகம் வேண்டு மென்றே தீர்ப்பை அமல்நடத்தாமல் காலம்தாழ்த்தி வருவதை கண்டித் தும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்ப டையில் பஸ்பாடி கிளீனர்களை பணி நிரந்தரப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும் .அரசு போக்கு வரத்துக்கழக மதுரை நிர்வாகம் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி சிஐடியு அரசு போக்கு வரத்து மதுரை தொழிலாளர் சங்கம் சார்பில் புதன் கிழமையன்று மதுரை அரசு போக்குவரத்து தலைமை யகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பி. எம். அழகர்சாமி தலை மை வகித்தார். சம்மேளன தலைவர் வீ.பிச்சை, பொதுச் செயலாளர் ஏ. கனகசுந்தர், துணைத் தலைவர் ஜி. ராஜேந்திரன் ஆகியோர் உரை யாற்றினர். முன்னதாக தலைமை அலுவலகம் முன்பு அரசு போக்கு வரத்துக் கழக நிர்வாகம் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பஸ் பாடி கிளீனர்கள் தங்கள் குடும்பத்து டன் முழக்கங்கள் எழுப்பினர்.