districts

நலிந்த மக்கள் மீது அக்கறை காட்டும் முதல்வருக்கு குடிமக்கள் விழிப்பு -கண்காணிப்புக்குழு நன்றி

மதுரை, மே 18- மதுரை மாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு (வன்கொடுமை தடுப்பு சட்டம் அமலாக்கம்)வின்  செயலாளர் பி. பழ னிச்சாமி, குழுவின் ஆலோசகரும் மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினருமான எஸ்.மகபூப்ஜான் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வன்கொடுமை நிகழ்வு களால் பாதிக்கப்பட்டோருக்கு குறைந்த பட்ச நிவாரண தொகையாக ரூ.85 ஆயிரமும் அதிக பட்சமாக ரூ.8  இலட்சத்து 26  ஆயிரம் என்று  நடைமுறையில் இருந்தததை குறைந்த பட்சம் ரூ.1 லட்சம் முதல் 12 லட்சம்  ரூபா யாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது பாதிக்கப்பட்டோரின் வாழ்விற்கு சிறந்த பாதுகாப்பாகும் என்பத னையும், தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  நலிந்த சமுதாயத்தினரின் நல்வாழ்வில் அக்கறை காட்டும் நடவடிக்கைகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.  தமிழ் நாட்டில் பல கிராமங்களில் சாதி  வேறுபாடு இல்லாத மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதி பயணத்திலும் பிரிவினை இருக்கக்கூடாது என்பதில் முன் மாதிரியாக இத்தகைய கிராமங்களுக்கு ஊக்கத்தொகை யாக கிராம வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனடிப்படையில் முதன்முறையாக மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் ஊராட்சி மன்ற தலைவி வனிதாவுக்கு  மதுரை மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுதலுக்குரியது. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் வன்கொடுமைச் சட்டங்களில் பதிவு செய்யப்  பட்ட வழக்குகள். வளர்ந்துவரும் நிலைமை யில் உள்ளது. 2019ஆம் ஆண்டில் வன்கொடுமை நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1175லிருந்து 1296ஆக உயர்ந்துள்ளது. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகளை விரைவாக முடிக்க தற்போது 18 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. புதிதாக 4 சிறப்பு நீதிமன்றங்கள் சேலம், கிருஷ்ணகிரீரி, மதுரை, திருநெல்வேலியில் ஆரம்பிக்கப்படவுள்ளது பாராட்டுக்குரியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.