districts

img

அங்கன்வாடி முன்பு தேங்கிய மழை நீரால் குழந்தைகள் அவதி

மதுரை, ஏப்.25- மதுரை  மாநகராட்சி 29 வது வார்டில் உள்ள அங்  கன்வாடி முன்பாக குளம் போல தேங்கிய மழை நீரால் குழந்தைகள் பெற்றோர்கள் கடும் அவதிப்படுகின்றனர். மதுரை மாநகரில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக கனமழை  பெய்தது. இதனால் சாலை களில் மழைநீர் தேங்கி யது. வாகன ஓட்டிகள் பொது மக்கள் கடுமையாக பாதிக் கப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் 29 ஆவது வார்டுக்கு உட்பட்ட  செல்லூர் குமரன் தெரு பகுதி யில் உள்ள அங்கன்வாடி முன்பாக மழைநீர் குளம் போல தேங்கிக்கிடக்கிறது. இதனால் அங்கன்வாடிக்கு செல்ல குழந்தைகள் மிக வும் சிரமப்படுகின்றனர்.  அங்  கன்வாடி பணியாளர்கள் குடி நீர் உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்வதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர் மாநகராட்சி நிர்வாகம்  உடனடியாக தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்  மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறக்கூடிய பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள் ஆங்காங்கே அப்படியே விடப்பட்டுள்ளன. இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மாறியுள்ளது. பள்ளங்களை உரிய முறை யில் மூட வேண்டும் என்று  மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.