districts

img

‘போதையில்லா சமூகத்தை உருவாக்குவோம்’

மயிலாடுதுறை,  ஜன.1 - மயிலாடுதுறையில் பாலர் பூங்கா சோழம் பேட்டை - மாப்படுகை கிளை  சார்பில் நடைபெற்ற  சின்னஞ் சிறு குழந்தைகளின் நடை பயணம் பல்வேறு தரப்பி னரை வெகுவாக கவர்ந்துள் ளது. ‘போதையில்லா சமூ கத்தை உருவாக்குவோம்; எங்களை வாழவிடு!’ என்ற  மழலைகளின் கம்பீர முழக்கத் தோடு நடைபெற்ற பயணத் திற்கு பாலர் எஸ்.டேனியல் தலைமை வகித்தார். சோழம் பேட்டை பெட்ரோல் பங்க்  அருகே துவங்கிய பய ணத்தை பெட்ரோல் பங்க்  உரிமையாளர் வினோத் குமார் துவக்கி வைத்தார். புற்றுநோய், மனநோய் போன்ற பாதிப்பை ஏற்படுத் தும் ஹான்ஸ் போன்ற புகை யிலை போதைப் பொருட் களை தடை செய்ய வேண் டும். கஞ்சா புழக்கத்தை தடுக்க வேண்டும். இளம்  தாய்மார்களை விதவை களாக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங் களை எழுப்பி நடைபோட்ட னர். அவையம்மாள்புரம், சோழம்பேட்டை பகுதிகள் வழியாக வந்த நடைபயண பேரணி மாப்படுகை ரயில்வே கேட் அருகே நிறைவடைந்தது. 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங் கேற்ற இப்பேரணியை தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் நிறைவு செய்து உரையாற்றினார். கிளை செயலாளர் பிரபா கரன் நன்றி கூறினார். கடந்த சில மாதங்களாக, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பள்ளி மாண வர்கள் கஞ்சா பயன்படுத் தும் ஆபத்தான நிலை ஏற்பட் டுள்ளது. குறிப்பாக மயிலாடு துறை நகரத்தை சுற்றியுள்ள  அரசுப் பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற் பனை நடைபெற்று வரு கிறது. கஞ்சா போன்ற போதைப்பொருள் புழக் கத்தை தடுக்க வேண்டிய காவல்துறை, இதனை கண்டு கொள்ளாமல் அலட் சியமாக இருந்து வருவது கவலைக்குரியது.