மதுரை, ஜன.31- மதுரையில் டாக்டர் எம்.ஜி.ஆர் விளை யாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஜனவரி 31 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. எஸ்.அனீஷ் சேகர், முதலமைச்சர் கோப் பைக்கான மாவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலை வர் பேசுகையில், தமிழ்நாடு அரசு, இளை ஞர்கள் தங்களது தனித்திறன்களை வெளிப் படுத்தி மாநில அளவில், தேசிய மற்றும் சர்வ தேச அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்ல ஊக்கப்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றது. அந்த வகையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி கள் நடத்தப்படுகின்றன. முதற்கட்டமாக மாவட்ட அளவில் இப்போட்டிகள் நடத்தப் பட்டு வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் பங் கேற்க அனுமதிக்கப்படுவர். நடப்பாண்டில் மாநில அளவிலான இப்போட்டிகளுக்கு ரூ. 25 கோடி மதிப்பீட்டில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக மாநில அளவில் தனி நபர் போட்டிகளில் முதலிடம் பெறுப வர்களுக்கு ரூ.1 இலட்சம், 2-ஆம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.75 ஆயிரம், 3-ஆம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ. 3 ஆயிரம், 2-ஆம் பரிசு தலா ரூ. 2 ஆயிரம், 3-ஆம் பரிசு தலா ஆயிரம் ரூபாய் வழங் கப்படுகிறது. முதன்முறையாக இப்போட்டி கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர்கள், பொதுப்பிரிவினர், அரசு ஊழி யர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவு களாக நடத்தப்படுகிறது. மாவட்ட அள விலான தனிநபர் போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்களும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர், வீராங்கனை களும் மாநில அளவிலான போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லப்படுவர் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மதுரை மாநக ராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாந கராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை எம்.ராஜா, மாவட்ட விளையாட்டு- இளைஞர் நலன் அலுவலர் முனைவர்.க.ராஜா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.