மதுரை, ஜூலை 15- சென்னை மாமல்லபுரத்தில் பல்வேறு உலக நாடுகள் பங்கேற்கும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் துவக்க விழா ஜூலை 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனையர்கள் பங்கேற்க உள்ளனர். செஸ் விளையாட்டு மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரையில் ஜூலை 15 அன்று பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேனிலைப்பள்ளி, கஸ்தூரி பாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேனி லைப்பள்ளியில் மாணவ, மாணவிகளி டையே நடைபெற்ற செஸ் போட்டியை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர் , மாநக ராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகி யோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 44வது சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி விழிப்பு ணர்வு பேனர்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பள்ளி பேருந்தினை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாக ராஜன் மற்றும் மண்டலத் தலைவர்கள் ,மாமன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரி யர்கள், மாணவ, மாணவிகள் உட்பட மாநக ராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.