districts

img

மாநில விளையாட்டுப் போட்டிகள் சேரன் பள்ளி முதல் பரிசை வென்றது

சின்னாளப்பட்டி,பிப்.22- தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் கொங்கு நாடு பொறியியற் கல்லூரியில் மாநில அளவி லான ஹேண்ட்பால் போட்டி  நடைபெற்றது. இதில் 14 வய துக்குட்பட்ட பிரிவில் சின்னா ளப்பட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள்  கலந்து முதல் பரிசை வென்ற னர். திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் என்று பள்ளியின் முதல்வர் திலகம் வீரர்களை பாராட்டி னார். செவ்வாயன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் மாண வர்களுக்கு சான்றிதழ் வழங்  கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற சின்னாளப்பட்டி சேரன்  வித்யாலயா பள்ளி அணி யினரை திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் சரோஜினி, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலு வலர் ரகமத்கனி ஆகியோர்  பாராட்டினர். இந்நிகழ்ச்சி யில் மேனேஜிங் டிரஸ்டி சிவக்குமார், மேலாளர் பார திராஜா, உடற்கல்வி ஆசிரி யர்கள் அசோக், செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.