மதுரை, ஜூன் 7- போடி - சென்னை ரயில் இயக்கப்படும் என்ற அறி விப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி., நன்றி தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: சென்னை- போடிநாயக்க னூர் தடத்தில் உடனடியாக ரயிலை இயக்கவும், அம்ரித் பாரத் திட்டத்தில் தமிழ்நாட் டிற்கு கூடுதலாக திருப்பரங் குன்றம், கூடல் நகர் ரயில் நிலையங்களை இணைக்க வும் வேண்டும் என்று ரயில்வே ஆலோசனைக்கூட் டத்தில் ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்வி டம் நேரில் வலியுறுத்தி னேன். “அமைச்சரின் தேதிக் காக எவ்வளவு நாள் காத்தி ருப்பது?” என்றும் ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் கேள்வி எழுப்பினேன். இதைத்தொடர்ந்து வரும் 15 ஆம் தேதி போடி - சென்னை ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று குருவா யூர் எக்ஸ்பிரஸ்,கச்சிகுடா எக்ஸ்பிரஸ் இரண்டும் கொடை ரோடு நிலையத்தில் நிறுத்தவும் உத்தரவிடப்பட் டுள்ளது. அனைத்திற்கும் எனது நன்றி. இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.