ஆஃப், நுண்நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற வேண்டாம் ஆட்சியர் எச்சரிக்கை
விருதுநகர், ஆக.13- அதிக வட்டி வசூல் செய்யும் நுண் நிதி நிறு வனங்கள் மற்றும் ஆஃப் மூலம் கடன் பெற வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியது: நமது மாவட்டத்தில் முறையாக அனுமதி பெறாத பல நுண் நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை, பொதுமக்களுக்கு அதிக வட்டியில் கடன்களை வழங்கி மக்களை மிகவும் கஷ்டப்படுத்துவதாக புகார் மனுக்கள் வருகின்றன. எனவே நுண் நிதி நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தி டம் முறையான அனுமதி பெற வேண்டும். அனு மதிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் மட்டுமே கடன்கள் வழங்க வேண்டும். அதை மீறினால் கடன் வழங்கும் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை, பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் மட்டும் கடன் பெற வேண்டும். அதிக வட்டி வசூலிக்கும் நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் ஆஃப் செயலிகள் மூலம் கடன்களை பெற வேண்டாம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உரிமம் இன்றி கிராவல் அள்ளிய 2 பேர் மீது வழக்கு
விருதுநகர், ஆக.13- விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி பகுதி யில் உரிமம் இன்றி சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய 2பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விருதுநகர் அருகே உள்ளது வெள்ளூர். இங்கு கிராம நிர்வாக அலுவலராக இருந்து வருபவர் பாண்டிய ராஜன்(36). இவர் அம்மன் கோவில்பட்டி சாலையில் சென்ற போது சட்ட விரோதமாக உரிமம் இன்றி கிராவல் மண் அள்ளுவது தெரியவந்தது. இதையடுத்து, மண் அள்ளும் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த அவர், ஆமத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், வெள்ளூரைச் சேர்ந்த கணேசமூர்த்தி (43), அழகுராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கடையின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர்கள் திருட்டு
அருப்புக்கோட்டை, ஆக.13- அருப்புக்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், செல்போன்களை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். அருப்புக்கோட்டை குமரன் புதுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(34). இவர் கம்ப்யூட்டர்கள் மற்றும் அதற்குத் தேவையான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் வழக்கம் போல் இரவு கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். மறு நாள் காலை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப் பட்டிருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த கம்ப்யூட்டர் மானிட்டர்கள், ஸ்பீக்கர், செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாடு மேய்ந்த தகராறு பன்றி பண்ணை வைத்து நடத்தியவர் தலை துண்டித்து படுகொலை
இராஜபாளையம், ஆக.13- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார் புரம் கிராமத்தைச் சேர்ந்த வர் பூவையா வயது 47. இவர் இராஜபாளையம் தென் மேற்கு பகுதியில் புல்லுப் பத்தி மலை பகுதியில் பன்றி பண்ணை நடத்தி வருகிறார். அத்துடன் ஒரு 6 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு தென்னந்தோப்பையும் குத்த கைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். இந்த தோப்பில் சிலர் மாடுகளை மேய்த்து வந்த தாக கூறப்படுகிறது. இது குறித்து பூவையா கடுமை யாக எச்சரிக்கை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கணபதி சுந்தர் நாச்சியா புரம் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும், இவருக்குமி டையே பகை இருந்தது. இதற்கிடையே கடந்த 4 நாட்களுக்கு முன்பு பூவை யாவின் மனைவி செல்வி தனது கணவரை காண வில்லை என சேத்தூர் ஊரக காவல்நிலையத்தில் புகார் செய்திருந்தார். இது குறித்து சேத்தூர் ஊரக போலீசார் அப்பகுதியில் விசாரணை செய்து வந்தனர். இதற்கிடையே செவ்வா யன்று காலை இராஜபாளை யம் மேற்கு பகுதி செல்லும் அய்யனார் கோவில் பாதை யில் முடங்கியாறு பாலம் பகு தியில் அழுகிய நிலையில் மனித தலை கிடப்பதாக தக வல் கிடைத்தது. அதன் பேரில் இராஜபாளையம் டிஎஸ்பி அழகேசன் தலை மையில் வடக்கு போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து விசா ரணை நடத்தியதில் பூவை யாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த மூவருக்கும் சண்டை ஏற்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, கணபதி சுந் தர்ராஜ் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (19), தளபதி (21), பாலகிருஷ்ணன் (20) ஆகிய மூவரையும் பிடித்து விசா ரணை செய்ததில் புல்லு புத்தி மலை அடிவாரத்தில் உடலை புதைத்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடை பெற்ற இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் டி.கண்ணன் நேரில் பார்வையிட்டு விசா ரணை நடத்தி வருகிறார்.
பேருந்து வசதி கோரி அரசுக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
விருதுநகர், ஆக.13- அருப்புக்கோட்டை அருகே அரசு கலைக் கல் லூரி மாணவர்கள் பேருந்து வசதி கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை அருகே உள்ளது செட்டி குறிச்சி. இங்கு அரசு கலைக் கல்லூரி உள்ளது. இதில், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்த கல்லூரி துவங்கும் நேரத்திலும் முடி வடையும் நேரத்திலும் மாணவ, மாணவிகள் சென்று வர முறையான பேருந்து வசதி இல்லை. மேலும் மாண வர் செல்லும் சாலையும் மோசமானதாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வெகுண்டெ ழுந்த மாணவ, மாணவிகள், செவ்வாயன்று காலை திடீ ரென மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அருப் புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ - மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். பின்னர் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப் பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தேனி, ஆக.12- தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் கஞ்சா வழக்கில் சிக்கிய யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திங்கட் கிழமை, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா உத்தரவிட்டார். பெண் காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் குறித்து சமூக வலை தளங்களில் அவதூறாக பேசியதாக யூ டியூப்பர் சவுக்கு சங்கர் மீது கோவை இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த மே 4ஆம் தேதி பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை, பழனிசெட்டிபட்டி போலீசாரின் உதவியுடன் கோவை போலீசார் கைது செய்தனர். அப்போது, சவுக்கு சங்கர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் அவரது காரில் பழனிசெட்டிபட்டி காவல்நிலைய போலீசார் சோதனை நடத்தினர். அதில் 490 கிராம் எடை யுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா வைத்தி ருந்ததாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் இராமநாத புரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த ராம்பிரபு, கார் ஓட்டுநர் சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் இவர்களுக்கு கஞ்சா விற்றதாக இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த மகேந்திரன், கிடாத்திருக்கை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகிய இருவரையும் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், போதைப் பொருளை பயன்படுத்தி யும், மற்றவர்களுக்கு பயன்படுத்தக் கொடுத்து போதை பழக்கத்தை ஏற்படுத்தியும் வந்த சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சிவப்பிரசாத் பரிந்துரை செய்தார். இதனடிப்படை யில், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார்.
பழனி அருகே ரேக்ளா பந்தயம்
பழனி, ஆக.12- பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொழுமங்கொண்டான் ஊராட்சியில் ஞாயிற் றுக்கிழமை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, தொப்பம்பட்டி ஒன்றியச் செயலர் சுப்பிரமணி தலைமை வகித்தார். பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் ஈஸ்வரசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பொன்ராஜ், மாவட்ட வேளாண் பொருள் விற்பனை சங்கத் தலைவர் ராஜா மணி, மாவட்ட உறுப்பினர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்தினர். ரேக்ளா பந்தயத்தை தமிழக உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கொடிய சைத்து தொடங்கி வைத்தார். பந்தயத்தில் பெரிய காளைகள், சிறிய காளைகள் என இரண்டு வகை களாக பிரிக்கப்பட்டு பெரிய காளைகளுக்கு 300 மீட்டர் தொலைவும், சிறிய காளைகளுக்கு 200 மீட்டர் தொலைவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இதில், கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு சட்டப்பூர்வ அனுமதி பெற்றது போல் ரேக்ளா பந்தயத்துக்கும் சட்டப்பூர்வ அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தமிழக உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
கோயில் பாதை ஆக்கிரமிப்பு
தேனி, ஆக.13- கடமலைக்குண்டு கிராமத்தில் 300 ஆண்டு பழமை யான பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரன் கோயில் பாதையை தனி நபர் ஆக்கிர மித்து கல் கால் நடப்பட்டுள்ளதாகவும், இதனால் கோயி லுக்கு செல்வதற்கும், தோட்டங்களுக்கு செல்வதற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கிராம கமிட்டி தலைவர் டி.கே.ஆர்.கணேசன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கம்பம் ஏரியாக்குழு உறுப்பினர் வி.மோகன், கே.முருகன் உள்ளிட்ட கிராம மக்கள் மனு அளித்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி ரயில்வே போலீசார் சோதனை
விருதுநகர், ஆக14- விருதுநகர் அருகே சுதந் திர தினத்தை முன்னிட்டு இருப்பு பாதை மற்றும் ரயில் நிலையங்களில் போலீ சார் சோதனையில் ஈடுபட்ட னர். நாடு முழுவதும் 78 வது சுதந்திர தின விழா ( ஆகஸ்ட்15) வியாழனன்று கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அசம்பா வித சம்பவங்கள் ஏதும் நடை பெறாமல் இருப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு ஏற் பாடுகளை பலப்படுத்தி யுள்ளனர். இந்தநிலையில், விருது நகர் -தூத்துக்குடி ரயில்வே இருப்பு பாதையில் கௌ சிகா, மகாநதி பாலம், ரயில் பயணிகளின் உடைமைகள், வாகன காப்பகம் மற்றும் விருதுநகர் வழியாக செல் லும் ரயில்களில் காவல் ஆய்வாளர் செல்வி தலை மையில் எஸ்.எஸ்.ஐ. சுரேஷ் குமார் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.