districts

மதுரை முக்கிய செய்திகள்

மார்க்சிஸ்ட் கட்சியினர் மீதான வழக்கு தள்ளுபடி

மதுரை,ஏப்.2- 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு திடீ ரென்று பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிக்கை வெளி யிட்டது. இக்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  21.3.2018 அன்று மதுரை டவுன், பெரியார் பேருந்து  நிலையம், வடக்கு பக்க நுழைவாயிலின் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர்  மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் தலைமை யில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதுசம் பந்தமாக மதுரை டவுன், திடீர்நகர் காவல்துறையினர் 177 பேர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலை யில், இவ்வழக்கினை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியினர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்  பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கில்  கட்சி  வழக்கறிஞர் சீனிவாசராகவன் மற்றும் கட்சி வழக்கறி ஞர்கள் ஆஜராகி வாதாடினர். இதற்கான ஏற்பாட்டினை மாவட்டக்குழு உறுப்பினர் எம். ராமசாமி செய்தார்.

ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

மதுரை, ஏப்.2-  மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதி யைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் ஜெகதீஷ்.  இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை தனியார் நிதி  நிறுவனத்தில் பணிபுரிந்தார்.  அப்போது கடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் போட்டு  பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பழனியில் உள்ள அவரது வீடு மற்றும் சொத்துக்களை விற்று பாதி கடனை அடைத்துள்ளார். அங்கு கடன் தொல்லை தாங்க முடியாமல் மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனியில் உள்ள அவரது தந்தை ஜெகநாதன் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.  முழுமையாக கடனை அடைக்க முடியாததால் கடன்  கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஜெகதீஷ் சனிக்கிழமையன்று தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனைக் கண்ட உறவினர்கள்  ஜெகதீஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் அங்கு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இது குறித்து அவனி யாபுரம் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி

சாத்துர், ஏப்.2- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது  சங்கரநத்தம் ஊராட்சி, இங்கு  பட்டாசு தொழிலா ளர்களே  அதிகம் உள்ளனர். இந்நிலையில். இப்பகுதியைச்  சேர்ந்த கருப்பசாமி என்பவரது ஒரே மகன் பாலமுருகன் (15), அருகே உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.  இந்தநிலையில். பாலமுருகனுக்கு  சில தினங்களுக்கு  முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. எனவே. சாத்தூர் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். , இதை டுத்து, மருத்துவர்கள்.  மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுரி  மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்,  அங்கு சிகிச்சை பலனின்றி  பாலமுருகன் உயி ரிழந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இச்சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நத்தம் அருகே வாகனம்  கவிழ்ந்து ஒருவர் பலி

நத்தம், ஏப்.2- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேம்பார்பட்டி யை சேர்ந்தவர் சுப்பையா மனைவி சின்னகண்ணு (45). இவர் தனது அக்கா மகன் பாண்டியுடன் டாடா ஏசி வாக னத்தில் துவரங்குறிச்சிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது குமரபட்டிபுதூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது வாகனம் டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இதில் வாகனத்தில் வந்த சின்னகண்ணு கீழே விழுந்த தில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியா னார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீ சார் இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோத னைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மின்வாரிய அலுவலகத்தில்  இரு சக்கர வாகனம் திருட்டு

விருதுநகர், ஏப்.2- விருதுநகர் அருகே துலுக்கபட்டி மின்வாரிய அலு வலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனம்  திருடு போனது. விருதுநகர் அருகே உள்ள சங்கு ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் அமராவதி(48), மின் கணக்கீட்டாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில். வழக்கம் போல துலுக்க பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தனது இரு  சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி  வந்து பார்த்த போது காணவில்லையாம், எனவே, இது குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையததில் புகார் அளித்தார்.  அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீ சார் திருடு போன இரு சக்கர வாகனத்தை தேடி வரு கின்றனர்.

கத்தியை காட்டி நகை, பணம் பறிப்பு

விருதுநகர், ஏப்,2. மதுரை மாவட்டம். சிவரக்கோட்டையைச் சேர்ந்தவர் சாமுவேல்ராஜ்(30), இவர் விருதுநகரை அடுத்த போக்கு வரத்து பணிமனை அருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த 3 மர்ம நபர்கள், சாமுவேல்  ராஜின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்தி ருந்த தங்கச் சங்கிலி, சம்பளப் பணம் ,33ஆயிரம், மற்றும்  மடிக்கணினி ஆகியவற்றை பறித்துச் சென்று விட்டதாக கூறப்படுகீறது. இதுகுறித்து விருதுநகர் ஊரக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.

இணையதளம் வழியாக ஆயுள்சான்று பதிவிடுக!  தொழிலாளர் நலத்துறை  தகவல்

விருதுநகர், ஏப்.2- ஓய்வூதியம் பெறும் அமைப்பு சாரா  தொழிலாளர்கள் அனைவரும் இணைய தளம் வழியாக தங்களது ஆயுள் சான்றை  புதிவு செய்திட வேண்டுமென தொழிலா ளர் நலத்துறை அறித்துள்ளது. இதுகுறித்து  விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெ.காளிதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 18 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 60 வயது  முடிவடைந்த உறுப்பினர்களுக்கு ஓய்வூ தியம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும்   தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஆண்டு தோறும் ஏப்ரல்  மாதம் விருதநகர் தொழிலாளர் உதவி ஆணைய அலுவலகத்திற்கு வந்து ஆயுட்சான்று சமர்ப்பிக்கின்றனர். தற்போது ஓய்வூதியதாரர்களின் சிர மத்தை தவிர்க்கும் வகையில் ஏப்ரல் 9 முதல்  தொழிலாளர்கள் நலவாரிய  இணைய தளம் (tnuwwb.tn.gov.in) மூலம்தங்க ளது ஆயுள் சான்று சமர்ப்பிக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே. ஓய்வூதியதாரர்கள்,  ஆதார் எண், குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு),  ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை , வங்கி  கணக்கு எண் மற்றும் நேரடி புகைப்படம் ஆகிய விவரங்களுடன் இணையதளத்தில்  ஆயுள்சான்றினை சமர்ப்பிக்கலாம். ஓய்வூதிய ஆணை இல்லாதவர்களும் அதே இணைய தளத்தில்  விண்ணப்ப எண் மற்றும் தொழிலாளர் நல வாரிய  பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து  ஆணையை  பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். விண்ணப்ப எண் தெரியாதவர்கள். தாங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்தும் அல்லது  பய னாளியின் பெயர்  மற்றும் கடவுச்சொல்  ஆகியவற்றை உள்ளீடு செய்து  அறிந்து கொள்ளலாம்.  மேலும், ஓய்வூதிய தாரர்  களிடம் இருந்து ஆயுள்சான்று  அலுவல கத்தில் நேரில் பெற இயலாது. இவ்வாறு அதில்  தெரிவித்துள்ளார்.

அள்ளப்படாத சாக்கடையால் சுகாதாரச்சீர்கேடு சிபிஎம் மற்றும் பொதுமக்கள் முற்றுகை

சின்னாளப்பட்டி, ஏப்.1- திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சியில் பத்தாவது வார்டில் கடந்த  15 நாட்களாக சாக்கடைகள் அடைத்துள் ளன.  அந்த சாக்கடையில் உள்ள புழுக்கள்  வீட்டுத் தண்ணீரில் கலப்பதாக  பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதிக்கு வந்த கன்னிவாடி பேரூராட்சி மேஸ்திரி அகி லனை பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட்  கட்சியினர் சூழ்ந்துகொண்டு ,சாக்கடையை  அள்ளுமாறு கூறினர். இதனைத்தொடர்ந்து தலைமை எழுத்தர் வெள்ளையன் மற்றும்  மேஸ்திரி அகிலன் ஆகியோர் சாக்கடை களை எடுத்து விடுவதாக உறுதியளித்தனர். இது குறித்து சிபிஎம் ரெட்டியார்சத்தி ரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் கூறு கையில், கன்னிவாடி பேரூராட்சியில் எந்த பணிகளும் நடப்பதில்லை. மாதாந்திர கூட்டங்களும் ஒழுங்காக நடப்பதில்லை. அதிகாரிகளும் ஒழுங்காக வேலைக்கு வருவதில்லை இதனால் பல இடங்களில் சாக்கடைகள் தேங்கி தொற்றுநோய் பர வும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்த மாக பலமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை.   மாவட்ட நிர்வாகம் கன்னிவாடி பேரூராட்சி  மீது  அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

கேரளாவிற்கு எம்-சாண்ட் மணல் கடத்தல்  2 பேர் கைது- 2 டிப்பர் லாரி பறிமுதல்

தேனி, ஏப்.2- கேரளாவிற்கு எம்-சாண்ட் மணல் கடத்த முயன்ற இரு வரை கைது செய்த காவல்துறையினர் 2 டிப்பர் லாரியை  பறிமுதல் செய்தனர் . தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அனுமதி  சீட்டு இல்லாமல் கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக  கனிம வளங்கள் கடத்தப்படுவதாக தேனி மாவட்ட புவி யியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிக்கு தகவல்  கிடைத்தது. அதன்பேரில் கம்பம்மெட்டு மலைப்பாதை யில் உள்ள முதல் கொண்டை ஊசி வளைவில் அதி காரி பாண்டியராஜன், போலீசாருடன் இணைந்து தமிழ கத்தில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் உள்ள அனுமதி சீட்டுகளை ஆய்வு செய்தனர்.  அப்போது தமிழகம், கேரள மாநில பதிவு எண் கொண்ட 2 டிப்பர் லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில், தலா 6 யூனிட் எம்.சாண்ட் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதற்கான அனுமதி சீட்டை கேட்டபோது லாரி  டிரைவர்கள் இல்லையென்று கூறினர். இதனைத் தொடர்ந்து 2 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர். மேலும் அனுமதியின்றி மணல் அள்ளியதாக லாரி டிரைவர்களான உத்தமபாளையம் அருகே உள்ள  அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த ஜேசுராஜா (வயது 36), கூடலூரை சேர்ந்த அசோக் (31), லாரி உரிமை யாளர்களான அனுமந்தன்பட்டியை சேர்ந்த தினகரன், கம்பத்தை சேர்ந்த காஜாமைதீன் ஆகியோர் மீது கம்பம்  வடக்கு காவல்நிலையத்தில் பாண்டியராஜன் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர்  சரவணக்  குமார் வழக்குப்பதிவு செய்து ஜேசுராஜா, அசோக் ஆகி யோரை கைது செய்தார்.

தேனி அருகே நள்ளிரவில்  இரு சக்கர வாகனம் எரிப்பு 

தேனி, ஏப்.2-  தேனி அருகே பூதிப்புரம் ராமகாரன் தெருவை சேர்ந்த வர் ஊஞ்சல்ராஜ் மகன் மனோஜ்குமார் .சம்பவ தினத்தில் வேலைக்கு சென்று விட்டு வீட்டின் முன் இரு சக்கர வாக னத்தை நிறுத்திவிட்டு இரவில் தூங்க சென்று விட்டார். நள்ளிரவு 2 மணிக்கு இரு சக்கர வாகனம் எரித்து கொண்டி ருந்ததாகவும் பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் மனோஜ்குமார் புகார் அளித்தார் .இதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோழவந்தான் அருகே விபத்தில் இரும்பு வியாபாரி பலி

மதுரை, ஏப்.2-  மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்(60). இவர் பழைய இரும்பு வியாபாரி. ஞாயிறன்று காலை சோழவந்தா னுக்கு வந்து விட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழி யில் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் பாண்டி  காரில் சோழவந்தான் வந்து கொண்டிருந்தார்.  எதிர்பாராத விதமாக வரும் வழியில் பைக் மீது கார்  மோதியது.  இதில் சுப்பிரமணியன் தூக்கி வீசப்பட்டார். ஆபத்தான நிலையில் சோழவந்தான் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்கா மல் சுப்பிரமணியன் இறந்தார்.

புதிய மேல்நிலைத்தொட்டியில் கசியும் தண்ணீர் 

சிவகங்கை, ஏப்.2- சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் நாமனூர் ஊராட்சி  நா.லெட்சுமிபுரம் பெருமாள்பட்டி இரண்டு வார்டுகளிலும்  பல்லாண்டுகளாக குடிநீர் பிரச்சனை இருந்தது . மாவட்ட கவுன்சிலர் கோமதி தேவராஜனிடம் மக்கள் முன்வைத்த கோரிக்கையால் புதிய மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டப்  பட்டது. மார்ச் 22 அன்று குழாய் இணைப்பு கொடுத்து  புதிய மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற் றப்பட்டது. அன்றிலிருந்து தண்ணீர் தொட்டியிலிருந்து நீர்  கசிந்து ஒழுகிக் கொண்டுதான் இருக்கிறது  என்றும் அரசு  அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சீரமைக்க வேண்  டும். சரியில்லாமல் கட்டப்பட்ட தொட்டியை  இடித்து விட்டு  மீண்டும் புதிய தொட்டி கட்டித் தருமாறு கிராம மக்கள் கூறு கின்றனர்.