மனைவி உடலை எரித்த கணவர் மீது வழக்கு
சிவகாசி, ஆக.31- சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையில் தற் கொலை செய்து கொண்ட மனைவியின் உடலை காவல் துறைக்குத் தெரிவிக்காமல் எரித்த கணவர்- உற வினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த வர் முருகன்- சக்தீஸ்வரி (55) தம்பதியர். இவர்களின் மகன் காதல் திருமணம் செய்து கொண்டு தனியே வசிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சக்தீஸ்வரி மன விரக்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில் சக்தீஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கா மல் கணவரும், உறவினர்களும் சேர்ந்து உடலை எரித்துள் ளனர். ஆனால் மனைவி மாயமாகி விட்டதாக முருகன் கூறி வந்துள்ளார். இது புதுக்கோட்டைக் கிராம நிர்வாக அலு வலர் மாரீஸ்வரிக்குத் தெரியவந்தது. அவர் எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் முருகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
திருவில்லிபுத்தூர் நகராட்சியில் ஒரே நாளில் 32 தீர்மானங்கள்
திருவில்லிபுத்தூர், ஆக.31- திருவில்லிபுத்தூர் நகராட்சிக்கூட்டம் தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத் தில் நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணி, நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், நகராட்சிப் பொறியாளர் கோமதி சங்கர், இளநிலைப் பொறியாளர் நாகராஜ், தண்ணீர் மேற்பார்வையாளர் பவுன்குமார், நகராட்சி மேலாளர் பாபு, நகர்நல அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையை எடுத்துக் கூறினர். அதற்குப் பதிலளித்த தலைவர், தாமிர பரணி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் தண்ணீர் வரத்துக் குறைவாக உள்ளதால் பற்றாக்குறை ஏற்படு கிறது. வரும் நாட்களில் வார்டுகளில் பழைய முறையில் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய் யப்படும் என்றார்.
ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி
ஒட்டன்சத்திரம், ஆக.31- ஒட்டன்சத்திரம் கான்பிடென்ட் செஸ் அகாதெமி செய லாளர் சண்முககுமார் விடுத்துள்ள அறிக்கை:- திண்டுக்கல் மாவட்ட அளவிலான செஸ் போட்டி செப்டம்பர் 3- ஆம் தேதி ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. 9, 12 ,15 ஆகிய வயது அடிப்படையில் பல பிரிவு களில் போட்டி நடைபெறும். வெற்றிபெறுவர்களுக்கு (60 பேர்) பரிசுகள் வழங்கப்படும். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை 9787866583 என்ற தொலைபேசியில் செப்டம்பர் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கெட்டுப் போன இறைச்சி பறிமுதல்
அருப்புக்கோட்டை, ஆக.31- அருப்புக்கோட்டையில் உள்ள உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சியை உணவுப் பாதுகாப்பு அலு வலர்கள் பறிமுதல் செய்தனர். அருப்புக்கோட்டையில் ஏராளமான உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சியைப் பயன்படுத்தப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறைக்குப் புகார் வந்தது. இதையடுத்து, மதுரை சாலை, பாளையம்பட்டி உள்ளிட்ட பல்வே பகுதிகளில் உள்ள உணவகங்கள், சாலையோர உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலு வலர் முஹமது காசிம் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது கெட்டுப் போன இறைச்சி, நிறமிகள் அதிக மாகச் சேர்க்கப்பட்ட இறைச்சி வகைகளைப் பறிமுதல் செய்து அழித்தனர். அரசால் தடை செய்யப்பட்ட நெகி ழிப் பைகளையும் பறிமுதல் செய்தனர். கெட்டுப்போன இறைச்சி வைத்திருந்த உணவகங்களுக்கு ரூ.27ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தினமலரை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம்
பழனி, ஆக.31- முதல்வர் மு.க.ஸ்டாலினின் காலை உணவுத் திட்டத்தைக் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட உண்மையின் உரை கல் எனப் பிதற்றிக்கொள்ளும் “ தினமலர்” நாளேட்டைக் கண்டித்து வியாழனன்று மாண வர்கள் தினமலர்” நாளேட்டைக் தீயிட்டுக் கொளுத்தி னர் பழனியில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தீபக்ராஜ்,கல்லூரி கவின்குமார், முத்துமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கிணற்றின் தவறி விழுந்த நிறைமாத கர்ப்பிணி பலி
தேனி, ஆக.31- தேனி அருகே ஆட்டுக்குக் கிளை பறிக்கச் சென்ற நிறைமாத கர்ப்பிணி கிணற்றில் தவறி விழுந்து தண்ணீ ரில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். தேனி அருகே உள்ள வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி (21). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பாலன் மகன் போஸ்(25) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. முரு கேஸ்வரி வளைகாப்பு சடங்கு முடிந்து தனது தாயார் வீட்டில் தங்கியிருந்தார். அங்கு, வீட்டருகே உள்ள கிணற்றின் அருகே ஆட்டுக்குக் கிளை ஒடிப்பதற்குச் சென்ற முருகேஸ்வரி, நிலைதடுமாறி 100 அடி ஆழ முள்ள கிணற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு மீட்புப் படை யினர், நான்கு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் கிணற்றில் மூழ்கியிருந்த முருகேஸ்வரியின் சடலத்தை மீட்டனர்.
பாஜக அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
தேனி, ஆக.31- இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடை முறைச் சட்டம், இந்தியச் சாட்சியச் சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 348-க்கு எதிராக இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மாற்றி மசோதா தாக்கல் செய்துள்ள பாஜக-வின் கொடுங்கோல் ஆட்சி யைக் கண்டித்து தேனியில் வழக்கறிஞர்கள் நீதிமன் றத்தைப் புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்குத் தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் எம்.கே.எம்.முத்து ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், பாலமுருகன், இணைச் செயலா ளர்கள் சிவசுப்ரமணி, பாலாஜி, மூத்த வழக்கறிஞர்கள் ஜெயபாரதி, காண்டீபன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்
இராமேஸ்வரம், ஆக.31- கச்சத்தீவு அருகே மீன்பிடித்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். பல ஆயி ரம் ரூபாய் இழப்புடன் வியாழக்கிழமை மீனவர்கள் கரை திரும்பினர். இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற் பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். புதன் கிழமை நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இலங்கை கடற்படை விரட்டியதால் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்துடன் மீனவர்கள் கரைக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதனால் பல ஆயிரம் ரூபாய் இழப்புடன் மீனவர்கள் வியாழக்கிழமை கரைக்குத் திரும்பினர்.
8.92 கோடி மதிப்பிலான 14.8 கிலோ தங்கம் பறிமுதல்
இராமநாதபுரம், ஆக.31- இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே களி மண்குண்டு பகுதியில் இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து துணை ஆணையர் வி.விஜயகுமார் தலைமையில் கண்காணிப்பு நடைபெற்றது. அப்போது சல்மான்கான் என்பவரிடமி ருந்து 8.92 கோடி மதிப்பிலான 14.8 கிலோ தங்கம் புதன் கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சிலுக்குவார்பட்டி அருகே கொலை
சின்னாளபட்டி, ஆக.31- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி ஊராட்சி கரியாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆச்சிமுத்து (78). இவரது மூன்றாவது மகன் மருதுபாண்டி அவரது மகளுக்குத் திருமணம் வைத்துள்ளார். அந்தத் திருமண அழைப்பிதழில் முதல் மகன் பெயர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து ஆச்சிமுத்துவை மற்றொரு பேரனான மருதை(27) சந்தித்து எனது தந்தை மற்றும் தாய் பெயர் அழைப்பிதழில் ஏன் இடம்பெறவில்லை எனக் கேட்டுள் ளார். இதில் ஏற்பட்ட பிரச்சனையில் மருதை அரிவாளால் ஆச்சிமுத்துவை வெட்டியுள்ளார். இதில் ஆச்சிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிலக்கோட்டை காவல்துறையினர் இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிநீர் குழாய் பதிக்கும் பணி வருவாய்த்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
அருப்புக்கோட்டை, ஆக.31- அருப்புக்கோட்டை நகராட்சியில், கட்டங்குடி நீர் உந்தும் நிலையம் முதல் மதுரை சாலை மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி வரை ரூ.6 கோடி மதிப்பில் குழாய் பதிக்கும் பணியை விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அருப்புக்கோட்டை நகர் மன்றத்தலைவர் சுந்தரலட்சுமி, நகராட்சி ஆணையர் அசோக்குமார், உதவிப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர் கூறியதாவது: அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதிக்கு கையாற்றிலிருந்து வரும் குடிநீர் நேரடியாக விநியோ கம் செய்யப்பட்டு வந்தது. அந்தத் தண்ணீரின் சுவை மாறி விட்டதாக மக்கள் கூறினர். இதையடுத்து, கட்டங்குடியில் ரூ.5 கோடி செலவில் தண்ணீரைச் சுத்தப்படுத்தும் பணிக்காகச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வைகையிலிருந்து நேரடியாக வரும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து வழங்கப்படும். இதன் மூலம், குடிநீர் தரமும் சுவையுமாக இருக்கும் என்றார். மேலும், ரூ.444 கோடி செலவில் அருப்புக் கோட்டை, விருதுநகர், சாத்தூர் நகராட்சிக்கு சீவ லப்பேரியிலிருந்து புதிய குடிநீர்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. சீவலப்பேரியிலிருந்து சுமார் 115 கி.மீ தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மூன்று நகராட்சிகளுக்கும் அக்டோபர் மாதம் சீரான குடிநீர் வழங்கப்படும் என்றார்.