சிவகாசி, ஜூன்.1-
சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசுக் கடையின் பின்புறம் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சிவகாசி அருகே உள்ளது தெய்வானை நகர். இங்குள்ள தனியார் பட்டாசுக் கடையின் பின் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சிவகாசி நகர் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அனுமதி யின்றி பிஜிலி, சோர்சா, மத்தாப்பு, பேன்டன், லட்சுமி வெடிகள் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. அற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1.10 லட்சம். மேலும் இது தொடர்பாக சித்துராஜபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி, சாமிபுரம் காலனியைச் சேர்ந்த வைரமுத்து, செங்கமலப்பட்டியைச் சேர்ந்த விஜய்குமார்ஆகி யோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.