districts

மதுரை முக்கிய செய்திகள்

ஓட்டுக்குக் காசு கொடுக்கலாமா? வைகோ வேதனை

சிவகாசி, ஆக.21- தேர்தலில் பணம் கொடுப்பவர்களுக்கு வாக்க ளிப்பது நாட்டை மோசமான நடவடிக்கைக்கு இட்டுச் செல்லும் என மதிமுகப் பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்தார். சிவகாசியில் திருமண மண்டபம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறிய தாவது: அரசியல் வெற்றி தோல்வி என்பது சாதாரணமாக வந்து போகும். தற்போது அரசியலில் பணம் கொடுத்தால் தான் ஓட்டு என்ற புதிய நிலைமை உரு வாகி இருக்கிறது. இதுதான் ஆபத்தாக உள்ளது. இது  நாட்டை மோசமான நடவடிக்கைக்கு இழுத்துச் செல்லும்.  இனிமேல் கோடீசுவரர் தான் மக்களவையிலும் சட்ட மன்றத்தில் உறுப்பினர்களாக முடியும். மக்கள் பணத்திற்காக ஓட்டுப் போட்டு அவர்களிடத்தில் என்ன சேவையை எதிர்பார்க்க முடியும். அரசியல் கெட்டு விட்டது. அரசியல் பாழாகி விட்டது. பணம்தான் தான் என்ற நிலைமை உருவாகிவிட்டது என்றார்.

பட்டாசுத் தொழிலாளர் சங்கக் கிளை அமைப்பு 

சாத்தூர், ஆக.21- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அருகே உள்ளது இ மேட்டூர் கிராமம். இங்கு பட்டாசு தீப்பெட்டி  தொழிலாளர்கள் (சிஐடியு) சங்கத்தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலா ளர் எம்.சி.பாண்டியன், மாவட்டத் துனைச் செயலாளர் எஸ்.மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளைத் தலைவராக சண்முகத்தாய், துனைத் தலை வராக பால்தாய், செயலாளராக பூமாரி, துனைச் செய லாளராக ஜெயலட்சுமி, பொருளாளராக பூங்கொடி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.

திருமங்கலத்தில் தொடர் கொள்ளை
43 பவுன் நகை; பணம் இழந்த குடும்பங்கள்

மதுரை, ஆக.21- மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற தொடர் கொள்ளைச் சம்பவங்களில் மூன்று குடும் பங்கள் நகை, பணத்தை இழந்துவிட்டுத் தவிக்கின்றன. மதுரை மாவட்டம் திருமங்கலம் மாயோன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). கடந்த பத்து நாட்களாக இவ ரது வீடு பூட்டிக் கிடந்தது. இந்த நிலையில் இவரது வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் எட்டு  பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.   இதே பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கரி சல்காளாம் பட்டியில் நடந்த கோவில் கும்பாபி ஷேகத்திற்குச் சென்று விட்டார். அவரது வீட்டிலும் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து பணம், நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மாயோன் நகரைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது வீட்டி னுள் புகுந்த கொள்ளையர்கள் 35 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.  கொள்ளைச் சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

குடிபோதையில் தகராறு கணவனைக் கொலை செய்த மனைவி 
தேனி, ஆக.21- ஆண்டிபட்டி அருகே மதுபோதையில் தகராறில் ஈடு பட்ட கணவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த  மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறை யில் அடைத்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாலக கோம்பை, ராயவேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்மு கம் (37). இவரது மனைவி அழகுசின்னு (31). இவர்க ளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் கூலி  வேலை செய்து வந்தனர்‌. சண்முகம் மற்றும் அழகுசின்னு  இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த நான்கு வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.‌  இந்த நிலையில் சம்பவத்தன்று மது போதையில் சண்முகம் மனைவியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படு கிறது. ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த மனைவி  அழகுசின்னு, கணவர் சண்முகவேல் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி அங்கிருந்த அரிவாளால் சண்முக வேலை இடது கை, வலது முழங்கால் மற்றும் பின்பக்க‌த்  தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சண்முக வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இராஜதானி காவல்துறையினர் அழகு சின்னுவைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

நகை பறித்த இருவர் கைது

விருதுநகர், ஆக.,21- விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சரோஜா (75). இவர் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு அருகில் பர்தா அணிந்து இரண்டு பெண்கள் பயணம் செய்தனர். இருவரும், சரோஜாவுக்கு உதவி செய்வது போல் நாடகமாடியுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் கீழே இறங்கிச் சென்றுள்ளனர். அப்போது சரோஜா கழுத்திலிருந்த மூன்று பவுன் நகை மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து சரோஜா, விருதுநகர் மேற்கு காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதேபோல், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி நந்தினி. இவர் விருதுநகர்-அருப்புக்கோட்டை பேருந்தில் பயணம் செய்த போது, பர்தா அணிந்த இருவர் பாலவநத்தம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சென்றனர். அப்போது நந்தினியின் ஒரு பவுன் சங்கிலி திருடு போனது தெரிய வந்தது. அருப்புக்கோட்டை தாலுகா  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பவித்ரா தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைக் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பர்தா அணிந்து நின்ற இரண்டு பெண்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் மதுரை வண்டியூரை சேர்ந்த ரேகா (38), அமலா (37) என்பதும், ஓடும் பேருந்துகளில் பலரிடம் நகை களைத் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து திருடிய நகைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

சேந்தமங்கலத்தில் கனிமவளம் கொள்ளை

மதுரை, ஆக.21- மதுரை அலங்காநல்லூர் அருகே செம்  மண் அள்ளுவதாகக் கூறி கனிம வள கொள்ளை நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. அலங்காநல்லூர் ஒன்றியம், சேந்தமங்க லம் ஊராட்சியில் வசிக்கும் மார்கிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ரா. தங்கம் என்பவரது நிலத்திற்கு அருகில் இருபது (20) அடி ஆழத்தில் செம்மண் திருட்டு என்பது நடைபெறுகிறது. இதனால் நான் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, ஆடு, மாடுகள் வளர்க்க முடியவில்லை. சட்டத்திற்கு விரோதமாக செம்மண்னை லாரி, லாரியாக அள்ளிச் செல்லப்படுகிறது, இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கட்சியின் மாவட்ட;ச செயற்குழு உறுப்பி னர் வீ.உமா மகேஷ்வரன், ஒன்றியச் செய லாளர் எஸ்.ஆண்டிச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் மலை.கண்ணன், எம்.சேது ராஜன், ஆர்.தங்கம் ஆகியோர் அதிகாரி களைச் சந்தித்து முறையிட்டனர். சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் கனிமவளக் கொள்ளை நடை பெறுவதைக் கண்டறிந்ததாகவும் இது  குறித்து ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்  பிக்கப்போவதாகவும் கூறிச் சென்றுள்ள னர்.

சிபிஎம் பொதுக்கூட்டம்


திண்டுக்கல், ஆக.16 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச்செயலாளர் ஆர். சச்சிதானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்  கே.அருள்செல்வன், ஒட்டன்சத்திரம் ஒன்றியச்செயலா ளர் சிவமணி, தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் கனகு,  எம்.கருணாகரன் ஆகியோர் பேசினர்.  இந்தக் கூட்டத்தில் பெரியதுரை கோம்மை அணைக்  கட்டு அமைக்க வேண்டும். பாலாறு, பொருந்தல் ஆறு,  வரதமாநதி அணைகளின் உபரி நீரை கருங்குளத்தில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மண்,  மணல் திருட்டைத் தடுக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்ட முறைகேடுகளைத் தடுக்க வேண்டும், சத்திரப்பட்டி  இரண்டாவது வார்டு மக்களுக்கு கழிப்பறை கட்டித்தர  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை இல்லை 

தேனி, ஆக.21- நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத நிலையில் வைகை, முல்லைப்பெரியாறு அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பொய்த்த தால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளில் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முல்லைப்  பெரியாறு அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை காலை  நிலவரப்படி 119.35 அடியாகக் குறைந்துள்ளது. 95 கன  அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 47.56 அடியாக உள்ளது.  வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர் குடி நீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு  அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும்  திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம்  69.70 அடி. வரத்து இல்லாத நிலையில் மூன்று கன அடி  நீர் திறக்கப்படுகிறது. 

சிங்கம்புணரியில் கால்பந்து போட்டி

சிவகங்கை, ஆக.21- 16 அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டியில் வெற்றி  பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.  சிங்கம்புணரி சிங்கம்புணரியில் முன்னாள் அமைச்சர் மாதவனின் 90-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு என்பீல்டு  பகுதியில் அவர் நிறுவிய பாரி வள்ளல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாதவன் கால்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான கால்பந்துப் போட்டி நடைபெற்றது. விழா விற்குப் பள்ளித் தலைவரும் முன்னாள் அமைச்சர் மாத வனின் மகளுமான வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாதவனின் மகன் அருளாளன் முன்னிலை வகித்தார்,  விழாவிற்கு வந்த அனைவரையும் பள்ளி மேலா ளர்கள் கிருஷ்ணன், சரவணன் வரவேற்றனர். பள்ளி முதல்வர் ஷாம் பிராங்கின் டேவிட் வரவேற்றார். கால்பந்து  போட்டியை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசி ரியர் ராமராஜபாண்டியன் தொடங்கி வைத்தார். இறு திப்போட்டியில் பங்கேற்ற அமைச்சர் கே.ஆர்.பெரிய  கருப்பன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கிப்  பாராட்டினார். முதல் பரிசாக ரூ 50,090 ரொக்கம் மற்றும் கோப்பை திருச்சி காஜா மியான் மேல்நிலைப்பள்ளி அணிக்கும், 2-ஆம் பரிசு ரூ 40,090 மற்றும் கோப்பை  சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி அணிக்கும் 3-ஆம்  பரிசாக ரூ.30,090 மற்றும் கோப்பை வத்தலகுண்டு ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளி அணிக்கும், 4-ஆம் பரிசு ரூ20,090-ம் சிங்கம்புணரி பாரிவள்ளல் மேல்நிலைப் பள்ளி  அணிக்கும் வழங்கப்பட்டன.

விபிஎம்எம் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு 

திருவில்லிபுத்தூர், ஆக.21- திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன் கோவில் விபிஎம்எம் பொறியியல் கல்லூரியில் முதலாம்  ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாமில் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது.  இதற்குக் கல்லூரி தலைவர் வி.பி.எம். சங்கர் தலைமை வகித்தார். இயக்குநர்கள் ஜெயக்குமார், அசோக்  குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மணிகண்டன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமெரிக்கா வின் விர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன் பேசியதாவது: மாணவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி பயிலும் போது அதன் அடிப்படை பாடத்துக்கு முக்கி யத்துவம் அளிக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்க ளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம் என்றார் அவர். முத லாம் ஆண்டு துறைத் தலைவர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

போடி அருகே வெடிமருந்து தாயத்துக்கள் 

தேனி, ஆக.21- போடி அருகே அணைக்கரைப்பட்டி பகுதியில் கஞ்சா, மது பாட்டில்கள் விற்பனை குறித்து கண்காணிக்க குற்றத் தடுப்புப் பிரிவு  காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். போடி-தேனி நெடுஞ்சாலையில் அணைக்கரைப்பட்டி பிரிவு அருகே சந்தே கத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இருவரைப் காவல்துறை யினர் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல் கூறவே அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனை செய்த னர். இதில் கந்தக வெடிமருந்து நிரப்பப்பட்ட தாயத்துக்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில் இவர்கள் போடி புதூரைச் சேர்ந்த குரும்பத்தேவர் மகன் சடையன் (44) மற்றும் போடி அணைக்குப்பட்டியைச் சேர்ந்த ராமு (43) என்பது தெரிந்தது. இதனையடுத்து சட்டவிரோதமாக வெடி பொருள்கள் வைத்திருந்ததாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போடி தாலுகா காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்

விருதுநகர். ஆக 21 விருதுநகரில் மத்திய வங்கி ஊழி யர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் வழங்க வேண்டிய 20 சதவீத பஞ்சப்படியை வழங்க  வேண்டும். ஊதிய உயர்வில் வகை படுத்தக் கூடாது. மாநிலக் கூட்டுறவு வங்கி  மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களையும் இணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி என உருவாக்க வேண்டும் என மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விருதுநகர் கச்சேரி சாலையில் நடை பெற்ற போராட்டத்தில் சங்கத் தலைவர்  சசிகுமார் பொதுச்செயலாளர் வெள் ளைச்சாமி, மாநிலத் துணைத் தலைவர் வேல்ராஜ், தென்னரசு உட்பட பலர் பங்கேற்றனர்.