districts

img

சிபிஎம் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம்

திண்டுக்கல், பிப்.10- சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சிகளின் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  வி.கே.முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக ஆத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன் நிர்வாகிகள் அறி வழகன், எஸ்.ஆர். முருகன், எம்.வி முருகன், தங்க மாயன் ஆர்.எஸ்.முருகன், சிபிஐ நகர் செயலாளர் கல்யாணி, நாகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.கணேசன், ஆர்.பால்ராஜ், ஆர்.சின்னத்துரை, கோபால், கோபால் கிருஷ்ணன், சுந்தர் உள்ளிட்ட பலர் வாக்குச் சேகரித்தனர். முன்னதாக வெற்றிக் கான வியூகம் குறித்த ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. வேட்பாளர் வி.கே. முருகன் நேருஜி நகரில் வாக்குச் சேகரித்த போது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அய்யலூர் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவு டன் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பேரூராட்சி முதலாவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் முருகேஸ்வரி வாக்குச் சேக ரித்தார். நிகழ்வில் திமுக நகர் செயலாளர் கருப்பன், பாண்டி, சரவணன், கணேசன், கே.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, எம்.கே.சம்சுதீன், எம்.கே. சம்சுதீன், ஆர்.கண்ணன், ஆகியோர் பங்கேற்றனர்.  ஒட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சிவமணி வாக்குச்சேகரித்தார். நிகழ்வில் கே.எஸ்.பெரியசாமி, முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.