மதுரை, ஜூலை 29- சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக் கத்தின் (MESS) முதல் மாநில மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த மாநில சிறப்பு மாநாட்டிற்கான விளக்க பிரச்சாரம் மதுரை புற நகர் மாவட்டம் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சோழ வந்தானில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் க.தமிழ ரசன் தலைமை வகித்தார். மதுரை புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.வேல்பாண்டி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பி. பொன்ராஜ், விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன் ஆகியோர் மாநாட்டின் நோக்கங்கள் குறித்து பேசினர்.