மதுரை, ஜூலை 21- பொதுத்துறை மற்றும் கிராம வங்கி களை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் முடிவை கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் ஜூலை 19 முதல் 22 ஆம் தேதி வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் பிரச்சாரம் பயணம் துவங்கியது தூத்துக் குடி மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆண்டோ கால்பட் தலைமையில் துவங்கிய பிரச்சார பயணம் வெள்ளியன்று மதுரை ரயில் நிலையம் மற்றும் தமுக்கம் மைதானம் மாட்டுத்தாவணி ஆகிய இடங்க ளில் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சாரப்பய ணக்குழுவினருக்கு தமுக் கம் மைதானம் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ. செல்வம், மாவட்ட செயலா ளர் க. நீதிராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் இரா. தமிழ், வாலிபர் சங்க மாவட்ட செயலா ளர் டி. செல்வா, பொருளாளர் எஸ். வேல் தேவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன் ஆகியோர் பிரச்சார பய ணத்தில் வந்தவர்களுக்கு சால்வை அணி வித்து வாழ்த்திப் பேசினர்.