districts

img

இயற்கை, வன விலங்குகளுக்கான நாட்காட்டி வெளியீடு

இராஜபாளையம், டிச.30- இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியின் நேச்சர் கிளப் இந்தி யாவிலேயே முதன் முதல் முறை யாக இயற்கை மற்றும் வன விலங்கு களுக்கான 2022 ஆண்டு நாட்காட்டி யை வியாழனன்று வெளியிட்டது.  இந்த நாட்காட்டியில் பல்வேறு இயற்கை மற்றும் வன விலங்கு பாதுகாப்பு குறித்த தகவல்கள் மற்றும் வனம் மற்றும் இயற்கை விழாக்கள், நாட்கள் உள்ளடக்கி யுள்ளது.  நாட்காட்டியை கல்லூரியின் செயலர் முனைவர் எஸ்.சிங்கராஜா வெளியிட்டார். முதல் பிரதியை ராஜூக்கள் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் டி.வெங்கடேஸ்வரன் பெற்றுக்கொண்டார். ஆங்கில துறைத்தலைவர் முனைவர் சி. ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். நேச்சர் கிளப் ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் பி.ஆர்.ராம்ஜி மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.