districts

img

மீண்டும் ஆக்கிரமிப்பில் பேருந்து நிறுத்தம்

நாகர்கோவில், அக்.25- போக்குவரத்துக்கும் பொ துமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் தனியார் வணிக வளாகத்தால் மழை நீர் ஓடை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதை அகற்றி நட வடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் சந்திப்பு போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள திருவனந்தபுரம்- காவல் கிணறு தேசிய நெடுஞ்சா லையில் உள்ளது. வாழ் வச்சகோஷ்டம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் ஓடைகள் சுத்தம் செய்து அடைப்புகள் அகற்றும் பணிகள் பாராட்டுக்குரிய வகையில் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஆனால், சுவாமியார்மடம் சந்திப்பில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான மணி காம்ப் ளக்ஸ் முன்புறம் உள்ள  மழை நீர் ஓடை மீண்டும் உயரமாக கட்டப்பட்டுள் ளது. இதனால் மழைநீர், ஓடையில் செல்ல வாய்ப்பு இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை வரைக் கும் காங்கிரீட் போடப் பட்டுள்ளதால் பொது மக்கள், வயதானவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று பேருந்து ஏறமுடியாமல் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இந்த வணிக வளா கத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். வங்கி பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாக னங்கள் பேருந்து நிறுத்தத் தை ஆக்கிரமித்து நிறுத் தப்படுகின்றன. இதனால் ஏற்படும் இட நெருக்கடியால் பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து தான் பேருந்துகளில் ஏற வேண்டி யுள்ளது என்கிறார்கள் பயணிகள். எனவே மக்களின் வரிப் பணத்தில் மழை நீர் ஓடை யை சீரமைக்கும் பேரூராட்சி நிர்வாகம் அதை ஆக்கிர மிப்பாளர்களிடமி ருந்து  விடுவித்து பேருந்து நிறுத்தம் முற்றிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை யும் பேரூராட்சி நிர்வாகமும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.