திருநெல்வேலி, பிப். 8- மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு வசதியாக தென்காசியில் இருந்து பேருந்து சேவை யை போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடக்கி வைத்தார். இந்த பேருந்தை விடக் கோரி பல மனுக்கள் அனுப்பப் பட்டன. தொடர்ந்து அதற்காக முயற்சிகள் எடுத்து எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று பஸ் விட ஏற்பாடு செய்த போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பாபநாசம் பணிமனை மேளாளர் சங்கர் ஆகியோருக்கு அனைத்து எஸ்டேட் மக்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். திங்கட்கிழமை முதல் மாஞ்சோ லைக்கு தினசரி மூன்று பேருந்து கள் இயக்கப்படுகிறது. ஆனால் பேருந்தில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள் ளது.