ஒட்டன்சத்திரம், ஆக.21- ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பாச்சலூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சாலையோர பள்ளங்களில் தடுப்புசுவர் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகாடு, பாச்சலூர் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை யின் வழியாக அதிகளவு வாகனங்கள் சென்று வரு கின்றன. இதில் ஒட்டன்சத்தி ரத்தை அடுத்துள்ள வடகாடு மலைக்கிராம பகுதிகளில் சாலையோரங்களில் பல இடங்களில் அதல பாதாள பள்ளங்கள் உள்ளன.இத னால் வாகனங்கள் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்தோடு பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. மலைப்பகுதியில் உள்ள பள்ளங்களுக்கு முன்பாக தடுப்புச்சுவர் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.