districts

img

4ஜி அலைக்கற்றை பிஎஸ்என்எல்-க்கு வழங்குக!

மதுரை, டிச.17- பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மதுரை மாவட்ட 10வது மாநாடு சுனில் மைத்ரா அரங்கில் வெள்ளியன்று நடைபெற்றது.  இதற்கு மாவட்டத் தலைவர் டி.கே.சீனிவாசன் தலைமை வகித்தார். தேசியக்கொடியை அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா ஏற்றினார். சங்க கொடியை மாநி லச் செயலாளர் ஏ.பாபுராதா கிருஷ்ணன் ஏற்றினார். மாவட்ட துணைத்தலைவர் வி.சுப்புராயலு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்டச் செயலாளர் சி.செல் வின் சத்தியராஜ் வரவேற்றார். அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா, பிஎஸ்என்எல் பொதுமேலாளர் வேணுகோபால் ரியாலி ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.  தொழிற்சங்க மாநில, மாவட் டத் தலைவர்கள் என்எப்டிஇ மாவட்டச் செயலாளர் வி.ரமேஷ் பாபு, மாவட்டச் செயலாளர் ஏஐ ஜிஇடிஒஏ சி.கண்ணன், ஏஐ எஸ்என்எல்இஏ மாவட்டச் செய லாளர் கே.தமிழ்மாறன், சேவா பிஎஸ்என்எல் மாவட்டச் செய லாளர் ஏ.ஜெயகுமார், டிஇபியு மாவட்டச் செயலாளர் மகேஸ்வரி முருகன், ஏஐபிடிபிஏ மாவட்டச் செயலாளர் என்.உத்திரகுமார், டிஎன்டிசிடபிள்யுயு மாவட்டச் செயலாளர் என்.சோனைமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்டப் பொருளாளர் ஜி. சந்திரமோகன் நன்றி கூறினார். மாநாட்டில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலை வராக சுப்புராஜ், மாவட்டச் செய லாளராக பி.ரிச்சர்ட், பொருளா ளராக எம்.அண்ணாத்துரை ஆகி யோர் தேர்வு செய்யபட்டனர். 4ஜி அலைக்கற்றையை பிஎஸ்என்எல்-க்கு வழங்க வேண்டும், பிஎஸ்என்எல்-லை தனியார் மயமாக்கக் கூடாது, மாத ஊதியம் உரிய தேதியில் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.