திண்டுக்கல், அக்.30- திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் 34 வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமையன்று நடை பெற்றது. இந்த விழாவில் 380 மாணவ,மாணவிகள் பட்டங் களை பெற்றனர். கல்லூரி தலைவர் தனலட்சுமி அம்மாள் , முதன்மை தலைவர் ஆர்.எஸ்.கே.ரகுராம் ஆகியோர் தலைமையில் விழா நடைபெற்றது .முதல்வர் முனைவர் வாசுதேவன் வரவேற்றார். இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் ரேங்க் பெற்று தரவரிசைப்பட்டியலில் இடம் பிடித்துள்ள மாணவர்களுக்கு கல்லூரி சார்பாக தங்கப் பதக்கங்கள் வழங்கி சிறப்பித்தனர் . ரேஷ்மா மேனன் சிறப்புரையாற்றி பட்டங்களை வழங்கினார். இந்தாண்டு நடைபெற்று வரும் வளாக வேலைவாய்ப்பில் சுமார் 1040 மாணவ , மாணவிகள் தங்கள் படிப்பு முடியும் முன்பே பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .