மதுரை, ஜன.1- மதுரை வைகை வடகரை ஆழ்வார் புரம்- தேனி ஆனந்தம் அருகிலுள்ள தரைப்பாலம் வேலை பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் ஆழ்வார் புரம் மற்றும் செல்லூர் பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. பாலம் வேலை யை விரைவில் முடிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு - 1 ஆம் பகுதிக் குழு பல கட்ட போராட்டங்களை நடத்தியது. இதன்விளைவாக மீண்டும் வேலை நடை பெறுகிறது. பாலப் பணிகள் நடைபெறும் இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மா.கணேசன், மாவட்டக் குழு உறுப்பினர் டி. குமரவேல், கிளைச் செயலாளர் நமச்சிவாயம் ஆகி யோர் சனிக்கிழமையன்று நேரில் பார்வை யிட்டனர்.