பழனியில், பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும் திருக்கோவில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியிலும் காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்வை நவம்பர் 16 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார் .இதில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி,நகர்மன்ற துணைத் தலைவர் கே.கந்தசாமி, கோவில் துணை ஆணையாளர் பிரகாஷ். அறங்காவலர் குழு உறுப்பினர் கே.எம்.நிட்வேட் சுப்பிரமணி, பள்ளி முதல்வர்கள் ,மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பழனியாண்டவர் கலை-பண்பாட்டுக்கல்லூரியில் மாணவ,மாணவிகளுக்கு காலை உணவை மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.விசாகன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி ஆகியோர் பரிமாறினர்.