திருநெல்வேலி, நவ. 17- தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவாணி, பொருநை ஆகிய ஐந்து இலக்கிய திருவிழாக்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா வருகிற 26, 27 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வியாழக்கிழமை செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:- தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவானி, பொருநை ஆகிய ஐந்து இலக்கிய திருவிழாக்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முதல் திருவிழாவாக நெல்லையில் பொ ருநை இலக்கிய திருவிழா வரும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த பொருநை திருவிழாவில் தனித் தனியாக மொத்தம் 5 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி நேருஜி அரங்கம், நூற்றாண்டு மண்டபம், வ.உ.சி அரங்கம், பி.பி.எல். திருமண மண்ட பம், பாளை மேற்கு கோட்டை வாசல் ஆகிய 5 அரங்குகளில் திருவிழா நடைபெறும். இதில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து அந்தந்த பள்ளி கல்லூரி நிர்வாகத்தினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இலக்கிய திருவிழாவில் ஓலைச்சுவடிகள் மற்றும் நாட்டுப்புற கலை பொருட்கள் குறித்து காட்சிப்படுத்தப்படும். ஏற்கனவே நெல்லை புத்தக திருவிழா வில் கலை பொருட்களை காட்சிப்படுத்தியி ருந்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே பொதுமக்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் தங்களிடம் ஓலைச்சுவடி, நாட்டுப்புற கலை பொருட்கள் இருப்பின் வரும் 24-ந் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மக்கள் தொடர்பு அலு வலரிடம் வழங்கலாம். https://porunailitfest.in/ என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள லாம். இலக்கிய திருவிழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள் ளோம். மண்டல அளவில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து இத்திருவிழா நடக்கிறது. நெல்லையில் கானி மக்கள் மத்தியில் இருக்க கூடிய மருத்துவம் சார்ந்த விஷ யங்களை டிஜிட்டல் மையம் ஆக்க நட வடிக்கைகள் எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பொ ருநை இலக்கிய திருவிழா குறித்த லோ கோவை ஆட்சியர் விஷ்ணு வெளி யிட்டார். அப்போது மாநகராட்சி கமிஷ னர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் பயிற்சி உதவி ஆட்சியர் கோகுல் மற்றும் அதி காரிகள் உடன் இருந்தனர்.