districts

img

‘புத்தகத் திருவிழா-2023’: மதுரையில் இன்று துவக்கம்

மதுரை, அக்.11-  மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அக்டோபர் 12 முதல் 22 வரை ‘புத்தகத் திரு விழா-2023’ மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மா. சௌ.சங்கீதா வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘புத்தகத் திருவிழா அக்டோபர் 12 முதல்  10 நாட்கள் தினந்தோறும் காலை 11 மணி  முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள் ளது. இதனை வணிகவரி மற்றும் பதி வுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல்  தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்  பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநக ராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் மற்  றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள்  ஆகியோர் வியாழனன்று மாலை 6 மணிக்கு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்க உள்ளனர்.  200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்ப கங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, கலை இலக்கியம் சார்ந்த தக வல்களை அறிந்து பயன்பெற ஏதுவாக வும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள் ளன.  அரங்குகளில் தினந்தோறும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 13 வய திற்குட்பட்ட மாணவர்களுக்கான சிறார் பயி லரங்கம், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை குழந்தைகளுக்கான சிறார் சினிமா மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கதை  கூறும் ‘கதை கதையாம் காரணமாம்’ போன்ற  பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற வுள்ளன. மாலை 4 மணி முதல் பள்ளி மாணவ, மாண வியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் மாலை 5 மணி முதல் கல்லூரி மாணவ,  மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி கள் நடைபெறவுள்ளன. தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை  பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சா ளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளன.  மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள்,  புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் கண்டு களித்திடவும், புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு தெரி வித்துள்ளார்.