திருநெல்வேலி, ஜன.1- 2022 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குழந்தைகளோடு புத்தகம் என்ற தலைப்பில் நெல்லை டவுன் காந்திசிலை அருகில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். 30 குழந்தைகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.