districts

img

31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம்

மதுரை, ஆக.25-  31 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி டிட்டோஜாக் அமைப்பின் சார்பில் செப்டம்பர் 10ம் தேதி  நடைபெறும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தி லும், செப்டம்பர் 29, 30 அக் டோபர் 1 ஆகிய 3 நாட்கள் நடை பெறும் கோட்டை முற்றுகைப் போராட்டத்திலும் முழுமையாக பங்கேற்பது என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.

இதன் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் மூ.மணி மேகலை தலைமையில் ஞாயி றன்று மதுரையில் நடைபெற்றது. துணைப் பொதுச் செயலாளர் தே. முருகன் முன்னிலை வகித்தார். மதுரை மாவட்டச் செயலாளர் பெ.சீனிவாசகன் வரவேற்புரை ஆற்றினார். எஸ்டிஎஃப்ஐ பொதுக் குழு உறுப்பினர் எஸ்.டேவிட் ராஜன் நன்றி கூறினார். பின்னர் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) அமைப்பின் சார்பில் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின் - குறிப்பாக பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு, முன்னுரிமை ஆகிய வற்றைப் பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ ரத்து செய்திட வேண்டும்; அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர்களுக்கு தன்பங்கேற்பு ஓய்வூதி யத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்; கடந்த 15 ஆண்டு களாக பாதிக்கப்பட்டுள்ள இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்; கடந்த 12.10.2023 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டிட்டோஜாக் அமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கை களின் மீது உடனடியாக ஆணை கள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் 10.9.2024 அன்று நடைபெறும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திலும், அதனைத் தொடர்ந்து 29.9.2024, 30.9.2024, 1.10.2024 ஆகிய 3 நாட்கள் சென்னை யில் நடைபெறும் கோட்டை முற்றுகைப் போராட்டத்திலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முழுமையாகப் பங்கேற்பதென மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.

ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் பங்கேற்க உள்ளனர். 3  நாட்கள் நடைபெறும் தொடர் கோட்டை முற்றுகைப் போராட்டத் தில் ஒவ்வொரு நாளும் மாவட்ட வாரியாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

கடந்த ஜூலை 29, 30, 31 ஆகிய 3 நாட்கள் நடைபெற்ற டி.பி.ஐ முற்றுகைப் போராட்டத்தின் போது டிட்டோஜாக் அமைப்பு டன் இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடத்திய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் ஒரு மாதத்தில் முடி வெடுப்பதாகத் தெரிவித்தார். எனவே, விரைந்து கோரிக்கை களுக்குத் தீர்வுகாண வேண்டும்.

மேலும், டிட்டோஜாக் கோரிக் கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாகத் தலை யிட்டு டிட்டோஜாக் அமைப்பை அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும். அதன் மூலம் தொடக்கக் கல்வித்துறையில் சுமூக நிலையை ஏற்படுத்த வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து மாநில நிர்வாகி கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.